Friday, March 27, 2009

விபத்தில் பலியான ஆசிரியருக்கு சேரன் நடத்திய அஞ்சலி!


விபத்தில் பலியான் தன் முன்னாள் ஆசிரியருக்கு இயக்குநர் சேரன் அஞ்சலிக் கூட்டம் நடத்தினார்.

சேரனுக்கு சிறு வயதில் ஆசிரியராக இருந்தவர் கே. சுவாமிநாதன் (வயது 58). சேரன் படித்த மதுரை அருகே உள்ள மேலூரை அடுத்த ஒக்குப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் மீது சேரனுக்கு அதிக அன்பும் மரியாதையும் உண்டு. காரணம் சேரனுக்கு பல நிலைகளிலும் பக்க பலமாக இருந்தவர் சுவாமிநாதன்.

சமீபத்தில் ஆசிரியர் சுவாமிநாதன் வாகன விபத்தில் பலியானார். அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர். கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இருதய வால்வு போன்றவை 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

இதையடுத்து சுவாமிநாதனுக்கு அஞ்சலி மற்றும் பாராட்டு கூட்டத்தை சேரன் ஏற்பாடு செய்து நடத்தினார். சென்னையில் இருந்து நடிகர்களை அழைத்துச் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விழாவில் சேரன் பேசியது:

என்னை போல் பல பிரபலங்களை உருவாக்கியவர் ஆசிரியர் சுவாமிநாதன். பொதுவாக பிரபலங்கள்தான் வெளியில் தெரிவார்கள். ஆனால் அவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் கடைசிவரை வெளியே தெரிவதில்லை. எனக்கு சோதனை வந்த போதெல்லாம் அறிவுரை கூறி பக்கபலமாக இருந்தவர் என் ஆசிரியர்தான்.

வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம், எச்சரிக்கை அவசியம். நம்மை நம்பி நமது குடும்பத்தினர் உள்ளனர் என்பதை நினைத்து அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து உறுதி எடுக்கவேண்டும் என்றார் சேரன் கண்ணீருடன்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், குழந்தைகளை நல்ல மனிதர்களாகவும், நல்ல தலைவர்களாகவும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணி தூய்மையானது. ஒரு மனிதனை பெயர் சொல்லி அழைத்தவர்கள் அவர் இறந்து விட்டால் பாடியை எப்போது எடுப்பார்கள் என்று கேட்கிறார்கள்.

இப்படி வீணாக போகும் உடலை தானம் செய்வதால் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம். ஆசிரியர் சுவாமிநாதன் உடல் தானம் செய்ததன் மூலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரது பெயரில் அறக்கட்டளை அமைத்து அவரது குடும்பத்தினரும், டைரக்டர் சேரனும் தமிழ்நாடு முழுவதும் உடல்தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நன்றி - தட்ஸ்தமிழ்

Sunday, March 22, 2009

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றம்



மக்களவை தேர்தல் நடப்பதால் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசுகள் மறுத்துவிட்டன. இதனால் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில்லை என ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா அல்லது இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட அமைப்பு ஐபிஎல். இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய போட்டிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 தொடங்கி மே 13 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடந்ததால் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு கூறியது. அட்டவணையை மாற்றியமைக்கும் படி கேட்டுக்கொண்டது.

இதையடுத்து சில மாறுதல்களுடன் புதிய அட்டவணையை மத்திய அரசுக்கு அனுப்பியது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மீண்டும் இரண்டு முறை அட்டவணையை மாற்றி கொடுத்தது ஐபிஎல். அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களவை தேர்தலை நடத்துவதே எங்களுக்கு முக்கியம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் இன்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பிசிசிதலைவர் ஷாசங் மனோகர் கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படமாட்டாது.தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டுக்கு இந்த போட்டிகள் மாற்றப்படுகிறது. தென் ஆப்ரிக்கா அல்லது இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கலாம். இதனால் இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியதால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இந்திய மக்கள் போட்டிகளை பார்க்கும் வசதியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அனைத்து போட்டிகளும் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஈழமும் இந்தியாவின் நிலைப்பாடும்!



கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முடிவே இல்லையா? ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு சாபமா?.அவர்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட போவதில்லையா?. இப்படி தினமும் பல கேள்விகள் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். நம்மால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும்? தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு நம்மால் ஆன உதவிகள் செய்யலாம்?. வேறென்ன நம்மால் செய்ய முடியும்?. இந்த அகதி என்ற சொல்லை நாம் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். அந்த சொல்லை சொன்னாலே மனதில் ஒருவித தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. அது உணர்ச்சி உள்ள மனிதர்களுக்கு புரியும். இந்த ஈழத்தமிழர்களின் பிரச்சனை எப்போதோ முடிவுக்கு வந்திருக்க வேண்டிய விஷயம். இந்தியா நினைத்திருந்தால்.

ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு உணர்ச்சியுள்ள மனிதனின் மனதில் ஒருவித தவறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இலங்கை ராணுவ தளபதி "இந்தியா உதவாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்த அளவுக்கு புலிகளை வென்றிருக்க முடியாது" என்கிறார். இந்தியா சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகளாகிவிட்டது. இந்த 60 ஆண்டுகளில் நாம் பல போர்களை சந்தித்துவிட்டோம். பாகிஸ்தானுடன் நான்கு போர்களையும் (1947, 1965, 1971, 1999) சீனாவுடன் ஒரு போரையும் (1962) சந்தித்து விட்டோம். ஆனால் இந்த போர்களிலெல்லாம் இலங்கை அரசின் நிலைப்பாடு எப்படி இருந்தது. இந்தியாவுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நிலைமை இப்படி இருந்தும் இந்தியா ஏன் இலங்கைக்கு ராணுவ உதவிகள் அளிக்கிறது?. அதற்கும் சில அரசியல் காரணங்கள் (ராஜதந்திரம் என்று சொல்வார்கள்) இருக்கிறது. அதனை கீழே பார்ப்போம்.

இந்தியாவுக்கு இருபக்கமும் ராணுவ எதிரிகள் (சீனா, பாகிஸ்தான்) இருக்கிறார்கள். இந்தியாவை எப்போது அழிக்கலாம் என்று காத்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு கீழே இலங்கை இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் பிறகு அவர்களும் (இலங்கை) நமக்கு எதிரியாகிவிடுவர். அப்புறம் கேட்க தேவையில்லை. இந்தியாவைச் சுற்றி எதிரிகள் என்ற நிலைமை வந்துவிடும். இப்போதே சீனா இலங்கையுடன் பாசத்துடன் நடந்து கொள்கிறது. பிறகு ஏதாவது ஆபத்து காலத்தில் (போர் வந்தால்) இலங்கை சீனாவுக்கு ஆதரவாக செயல்படும். பாகிஸ்தானைப் பற்றி கேட்கத் தேவையில்லை. எப்போது இந்தியாவை போட்டு தள்ளலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நமுக்கு பெரும் இடியாக வந்து விடும். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத நிலைமை வந்துவிடும். ஆனால் இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளதும். இனியும் அப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் தான் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிப் பழகுகிறது. நம் எதிரிகளுடன் போர் வந்தால் அமெரிக்கா நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால். இது வரவேற்க படவேண்டிய விஷயம் தான். ஆனால் அமெரிக்க அரசின் நம்பத்தன்மை எந்த அளவு இருக்கும் என்பதை இந்தியா இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முற்சிக்க வேண்டும். அது இந்தியாவுக்கு நல்லது. நாம் மற்றவர்களை நம்பி பிழைக்க வேண்டிய நிலைமை இருக்க கூடாது. அதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும்.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்தியா இலங்கைக்கு எவ்வளவோ ராணுவ உதவிகள் அளித்தும் இலங்கை அரசு நமக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் விடுதலை புலிகள் அப்படியல்ல. அவர்கள் எப்போதுமே இந்தியாவுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள விரும்புபவர்கள். இலங்கை மாதிரி சந்தர்ப்பவாதிகள் அல்ல. இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பவர்கள். ஆனால் மற்ற நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக (ஈழத்தமிழர்கள்) அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அதனை விட்டுவிட்டு இந்தியா ஈழத்தமிழர்களின் நலனுக்கு ஆதரவாக செயல்படலாம். விடுதலை புலிகளுக்கும் இலங்கைக்கும் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கி வைக்க இந்தியாவால் முடியும். முதலில் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கத்திலிருந்து நீக்கி அவர்களைப் போராளிகளாக அங்கீகரிக்க வேண்டும். அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கும். தமிழர்கள் இலங்கையில் நிம்மதியாக வாழவேண்டும். ஒவ்வொரு தமிழனின் விருப்பமும் இதுதான். இதில் மாற்று கருத்து இல்லை. அப்படி மாற்று கருத்து இருந்தால் அவன் தமிழன் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவானால் அவர்கள் எந்த நமக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் நம் ரத்தங்கள். நம் சகோதரர்கள். அவர்கள் அங்கே தினமும் மடிந்து கொண்டு இருக்கும் வேளையில் இங்கே நாம் நிம்மதியாக இருப்பது இவர்களின் சாவை நாம் ரசிப்பது போலாகிவிடும். அது நமக்கு தீராசாபம். அது நம்மை சும்மாவிடாது.

பின்குறிப்பு:

ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். எந்த காலத்திலும் இலங்கை விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. ரஜினிகாந்த் சொன்னது போல கடந்த முப்பது வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதுவரைக்கும் ஒன்றும் பிடுங்க முடியாதவர்கள் இனியும் ஒன்றும் பிடுங்க முடியாது. ஈழம் அமைந்தே தீரும். இது உறுதி.

Friday, March 20, 2009

காதலித்துப்பார்!


உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்


காதலித்துப் பார்
------------------------------

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்


காதலித்துப்பார்
--------------------------------

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்
-----------------------------------

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்
---------------------------------------

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்
------------------------------------

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
நூல் - இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

Wednesday, March 18, 2009

அவன்தான் மனிதன் பாடல்கள்


ஆட்டுவித்தால்
யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே-ஆனால்
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே -(ஆட்டுவித்தால்)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்-இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் -(ஆட்டுவித்தால்)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்-அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா -(ஆட்டுவித்தால்)
----------------------------------------------*------------------------------------------------

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று (மனிதன்)

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தார் (2)
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது (மனிதன்)

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும் (2)
கூட்டை திறந்துவிட்டால் அந்த குருவி பறந்துவிடும்
காலில் விலங்கு இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விளங்குகையில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம் (மனிதன்)

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்துவிட்டேன் ஒரு கவலை முடிந்ததடா (மனிதன்)

Tuesday, March 17, 2009

காஞ்சீவரம் - திரைப்பார்வை






















ஆஹா! இந்த மாதிரி உலகத் தனமான சினிமாவைப் பார்த்து எத்தனை நாளாச்சு?. கமர்ஷியல் வாசனையே இல்லாத சினிமாவைப் பார்த்து எத்தனை நாளாச்சு?. எனக்குத் தெரிந்து இந்த மாதிரி தமிழ் சினிமாவை நான் இதுவரை பார்த்து கிடையாது. காஞ்சீவரம் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் சிலருக்கு பிடிக்கும். அந்த சிலர்தான் உண்மையிலேயே உண்மையான சினிமா ரசிகன். சரி கதைக்கு வருவோம்.

வேங்கடம் நம்முடைய கதையின் நாயகன் ஒரு நெசவுத் தொழிலாளி. திருட்டு வழக்கில் கைதாகி இரண்டு நாட்கள் பரோலில் உடல் நலம் குன்றி இருக்கும் தன் மகளைப் பார்க்க போலீசாருடன் பஸ்ஸில் வீடு வருகிறார். பெரும் மழை பெய்கிறது. அதனூடே வேங்கடத்தின் கடந்த கால வாழ்கையும் நம்முன்னே விரிகிறது.

தனக்கு கல்யாணம் செய்யும் பொது தன் மனைவிக்கு பட்டு புடவை உடுத்திதான் அவளுக்குத் தாலி கட்டுவேன் என்று சபதம் செய்து அது முடியாமல் போக, வெறும் கூரைப்பட்டு சேலை உடுத்தி ஊருக்கு வரும் வேங்கடத்தைப் பார்த்து ஊர் கண்டவிதமாய்ப் பேசுகிறது. பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு அவள் கல்யாணம் செய்து போகும் போது பட்டுச் சேலை உடுத்தி அனுப்புவதாக ஊர் முன்னிலையில் சொல்கிறார். ஊர் அவரைப் பார்த்து சிரிக்கிறது. அவரது மனைவிக்கும் அவரது மேல் கோபம். ஊர் அவரைப் பார்த்து சிரித்ததைப் பற்றி அவருக்கு கவலையில்லை. தன் மனைவி தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாளே என்று வருத்தம். தன் மனைவியைக் கூப்பிட்டு உண்டியலில் தான் சேமித்து வைத்திருக்கும் பணத்தைக் காட்டுகிறார். அதில் பட்டுச் சேலை வாங்குவதற்கு பாதி பணம் இருப்பதாகவும், மீதி பணத்தைத் தன் குழந்தையின் திருமணத்திற்குள் சேமித்து விட முடியும் என்று சொல்கிறார். அவரது மனைவிக்கு நம்பிக்கை பிறக்கிறது.












ஆனால்
மறுநாளே வேங்கடத்தின் தங்கையின் கணவர் பணம் கேட்டு நச்சரிக்க தான் சேமித்து வைத்திருந்த பணத்தை அவருக்குக் கொடுக்கிறார். அவரது மனைவிக்கு அதில் வருத்தம். தன் குழந்தையின் திருமணத்திற்கு சேமித்த வைத்த பணம் போய்விட்டதே என்ற சோகத்தில் தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து தினமும் பட்டு நூலைத் தன் வாயில் அடைத்து வைத்துத் திருடிகிறார். திருடி வரும் நூலை வைத்து தன் வீட்டில் இருக்கும் தறியில் பட்டு சேலையை கொஞ்சம் கொஞ்சமாக நெய்கிறார்.

இடையில் அவரது மனைவி உடல் நலம் சரியில்லாமல் இறந்து போகிறாள். வேங்கடம் கம்யூனிச கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்துகிறார். போராட்டத்தின் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டு மற்ற அனைத்தும் நிராகரிக்கப் படுகிறது. அதனால் போராட்டம் தொடர்கிறது. தன் மகளுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அதனால் அவளுக்கு பட்டு சேலையை நெய்து முடிக்கும் எண்ணத்தில் தானே போராட்டத்தை வாபஸ் பெறுகிறார். அதில் அவருடைய நண்பருக்கு கோபம். முதலாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்று நினைக்கிறார்.

மறுபடியும் வேலைக்கு செல்கிறார் வேங்கடம். மீதி பட்டு சேலை நெய்வதற்காக மீண்டும் வாயில் அடைத்துப் பட்டு நூலைத் திருடுகிறார். வாயில் அடைத்து வைத்து வீட்டுக்குத் திரும்பும்போது தன்னுடைய நண்பரால் மாட்டிக்கொள்கிறார். எல்லோரும் அவரை அடித்து உதைக்கிறார்கள். அவரது மகள் அவரை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறாள். போலீஸ் அவரைப் பிடித்துச் செல்கிறது. வேங்கடம் ஜெயிலுக்கு சென்றதும் அவரது மகள் உடல் நிலை மோசமாகிறது. தன் மகளைக் காண பரோலில் வருகிறார். தன் மகளின் உடல்நிலையை பார்த்து கண் கலங்குகிறார். தன் கையாலேயே உணவில் விஷம் கலந்து தன் மகளுக்கு ஊட்டுகிறார். மகள் இறந்தவுடன் தான் நெய்து வைத்த பட்டு சேலையை அவளது உடம்புக்கு போர்த்துகிறார். ஆனால் அவர் நெய்த பட்டு சேலையால் அவரது மகளின் பிணத்தைக் கூட மூட முடியவில்லை. மீண்டும் பிணத்தை முழுமையாக மூட முயற்சி செய்கிறார். முடியவில்லை என்று தெரிந்து விரக்தியில் சிரிக்கிறார். அந்த விரக்தியான சிரிப்போடு படம் நிறைவடைகிறது.

வேங்கடமாக பிரகாஷ்ராஜ் அருமையாக செய்திருக்கிறார். ஒரு நெசவாளியின் துயரத்தை நம் கண்முன் கொண்டு வருகிறார். இதற்கு மேல் யாரும் இந்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது. மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவரது மனைவியாக ஷ்ரேயா ரெட்டி நிறைவாக செய்திருக்கிறார். பிரகாஷ்ராஜின் நண்பராக வருபவர், முதலாளி, பிரகாஷ்ராஜின் மகள் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். டைரக்டர் ப்ரியதர்ஷனை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள். அவர் மேலும் இந்த மாதிரி முயற்சிகளை தொடர வேண்டும்.

பின்குறிப்பு:

நம்முடைய தமிழ் சினிமா நாயகர்கள் அஜித்தும் விஜயும் இந்த மாதிரி முயற்சிகளை எடுக்கலாமே. ஏன் அவர்கள் எல்லாம் ஒரே மசாலா படங்களாக நடிக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர்களுக்கு இருக்கும் பப்ளிசிட்டிக்கு அவர்கள் இந்த மாதிரி நல்ல கதையம்சமுள்ள, நடிப்பிற்கு தீனி போடும் படங்களையும் அவ்வப்போது செய்யலாமே. அது அவர்களுக்கு மக்கள் மத்தியில் மரியாதையை பெற்றுத் தரும். முயற்சி செய்வார்களா? அஜித்தின் மேல் எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. விஜயின் மேல் சுத்தமாக இல்லை.

Monday, March 16, 2009

யோசி மகனே யோசி! - கொஞ்சமா.


ஒரு பழக்கடைக்கு ஒருவன் சென்றான். அவன் அந்த பழக்கடை முதலாளியிடம் ஒரு பத்துரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு ஆரஞ்சு ஜூஸ் போடச் சொன்னான். உடனே அந்த முதலாளி அவனைப் பார்த்து சாதா ஜூஸ் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ஜூஸ் வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அவன் சாதா ஜூஸ் போதும் என்றான். பழக்கடை முதலாளியும் அவனிடம் அவனிடம் இரண்டு ரூபாய் சில்லறை கொடுத்து விட்டு சாதா ஜூஸ் விலையான எட்டு ரூபாய்க்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டுக் கொடுத்தார். அவனும் ஜூஸ் குடித்து விட்டு சென்றுவிட்டான்.


அடுத்ததாக இன்னொருவன் அதே பழக்கடைக்கு வந்தான். அவனும் அந்த முதலாளியிடம் காசு கொடுத்து விட்டு ஆரஞ்சு ஜூஸ் ஒன்று என்றான். ஆனால் முதலாளி அவனிடம் சாதா ஜூஸ் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ஜூஸ் வேண்டுமா என்று கேட்காமல் அவனுக்கு ஸ்பெஷல் ஆரஞ்சு ஜூஸ் போட்டுக் கொடுத்தார்.


இப்போது கேள்விக்கு வருவோம். முதலில் அந்த கடைக்கு வந்தவனிடம் அந்த கடை முதலாளி உனக்கு சாதா ஜூஸ் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ஜூஸ் வேண்டுமா என்று கேட்டார். ஆனால் இரண்டாம் வந்தவனிடம் அப்படி கேட்காமல் அவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் போட்டுக் கொடுத்தார். அந்த கடை முதலாளி இருவரிடமும் ஏன் இருவேறு முறையில் நடந்து கொண்டார்?

இத்துடன் இந்த கேள்வி முடிகிறது. பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பார்க்கும் முன்பு நீங்களாகவே சற்று சிந்தித்து இதற்க்கான விடையை கண்டுபிடிக்கலாம். அப்படியும் முடியாதவர்கள் விடையைப் பார்க்க கீழே செல்லலாம்.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

விடை:

முதலில் வந்தவன் அந்த முதலாளியிடம் பத்து ரூபாய் கொடுத்து ஜூஸ் வேண்டும் என்று கேட்டான். அதனால் அந்த முதலாளி அவனுக்கு ஸ்பெஷல் அல்லது சாதா ஜூஸ் வேண்டுமா என்று தெரியாமல் அவனிடம் எந்த ஜூஸ் வேண்டும் என்று கேட்டார். ஆனால் இரண்டாவதாக வந்தவன் முதலாளியிடம் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் இரு இரண்டு ரூபாய் நாணயங்களையும் மற்றும் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் கொடுத்து ஜூஸ் வேண்டும் என்று கேட்டான். அதனால் அவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் வேண்டும் என்று அறிந்து கொண்டு அவனைக் கேட்காமலேயே அவனுக்கு ஸ்பெஷல் ஜூஸ் போட்டுக் கொடுத்தார்...

மறுபடியும் வேறொரு கேள்வியில் சந்திப்போம்.

Sunday, March 15, 2009

விஜயகாந்த் செய்ய வேண்டியது!


விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை புதிதாக ஆரம்பித்த போது, அதை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். முதலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்றார். கட்சி ஆரம்பித்த முதல் சட்டசபைத் தேர்தலில் எட்டு சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகளைப் பெற்று மற்ற கட்சிகளை வாயடைக்க வைத்தார். விருத்தாசலம் தொகுதியில் பாமகவை எதிர்த்து தானே போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பிறகு வந்த இடைத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் நிறைய வாக்குகள் பெற்றார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

வெற்றி பெற முடியவில்லை என்று தெரிந்ததும் அவர் என்ன செய்தார். தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதிக் கொடுக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்தார். பிறகு சென்னை மற்றும் பிற இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்றார். சமீபத்தில் மதுரையில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தேமுதிக கட்சி தோல்வி அடைந்தது. கடந்த முறை அதே தொகுதியில் நடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகளைக் காட்டியும் குறைவான வாக்குகளைப் பெற்றார். அதற்கு முக்கிய காரணம் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியின் பணபலம். ஒரு ஓட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று மக்கள் பணத்தை மக்களிடமே வாரி இறைத்தார்கள். மக்களும் அந்த கட்சிகளுக்கு ஒட்டு போட்டார்கள்.

இந்தியாவில் இன்னும் ஏழ்மை நிலை அதிகமாகத்தான் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் மாற்ற மாட்டார்கள். காரணம் ஒட்டு வங்கி. தமிழகத்திலும் அதுதான் நடக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றது. அவர்கள் நினைத்திருந்தால் தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னணியில் கொண்டு வந்திருக்கலாம். விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் என்ன நடந்தது. அதுதான் இன்று பார்க்கிறோமே. விவசாயிகள் அவர்கள் விளைவித்த பயிர்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்ய முடியாமலும், அரசும் அந்த பயிர்களுக்கு உரிய விலையை கொடுக்காமலும் விவசாயிகளை ஒட்டு மொத்தமாக நசுக்குகின்றனர். வாழ முடியாமல் கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அவலமும் இங்கு நடந்தது.

ஏழ்மை என்னும் நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கி இரு திராவிட கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை அழித்து வந்திருக்கின்றன. இந்த நிலையில் தான் இரு திராவிட காட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை ஆரம்பித்தார். சரி இவர் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை ஏழை மக்களுக்கு பிறந்தது. முதலில் மக்களுடன் கூட்டணி என்றவர் பிறகு தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்றார். இப்போது வரப்போகும் லோக்சபா தேர்தலில் அவர் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்று இன்னும் தெரியவில்லை. பத்திரிகைகள் அவர்கள் இஷ்டத்திற்கு கதைகளைக் கட்டி விடுகின்றனர். அதற்கு விஜயகாந்தும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

தான் தனித்து போட்டியிட்டால் எப்படியும் ஜெயிக்க மாட்டோம் என்று அவருக்குத் தெரியும். அதனால் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று விரைவில் அறிவிப்பேன் என்று சொல்கிறார். ஏன் அவர் முதலில் சொன்ன மாதிரி தனித்தே போட்டியிடலாமே. தோற்றால் தோற்க்கட்டுமே. அவர் கட்சி ஆரம்பித்து எத்தனை வருடங்கள் ஆகின்றது. எத்தனை சட்டசபைத் தேர்தல்களை சந்தித்திருக்கிறார். எத்தனை லோக்சபா தேர்தல்களை சந்தித்திருக்கிறார். அதற்குள் முதல்வர் ஆவேன் என்றால் எப்படி?. அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன் எப்படி அதிபரானார். தொடர்ந்து ஐம்பத்து இரண்டு முறை தேர்தல்களிலே தோற்றவர் அவர். பிறகுதான் வெற்றி பெற்றார்.

விஜயகாந்த் மட்டும் உடனே முதல்வர் ஆக வேண்டும் என்றால் எப்படி?. பொறுத்திருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும். தெளிவான முடிவுகளை அவர் எடுக்க வேண்டும். அதனை மக்களுக்கு அவர் தெளிவாக உணர்த்த வேண்டும் முதலில் ஒன்றை கூறி விட்டு பிறகு வேறொன்றை அவர் செய்யக்கூடாது. அது அவருக்கு அழகல்ல. இதனை விஜயகாந்த் உணர வேண்டும். உடனே அவர் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்று அவர் உடனே அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் தனித்தே நிற்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. எனது விருப்பமும் அதுவே. பார்ப்போம் அவர் தனித்து நிற்கிறாரா அல்லது கூட்டணி வைக்கிறாரா என்று.

Friday, March 13, 2009

சிந்தித்து செயல்படுங்கள்!


















ஒரு ஊரில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்நாளில் ஒரு பொய் கூட சொன்னதில்லை. எப்போதும் உண்மையை மட்டுமே பேசிய அவரை எப்படியும் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் முடிவு செய்தான். அதன்படி ஒரு நாள் ஒரு சிறிய பறவையை அந்த சிறுவன் தன் கைகளில் மறைத்துக் கொண்டு அந்த முதியவரிடம் வந்தான்.

அந்த சிறுவன் அந்த முதியவரைப் பார்த்து தான் மறைத்து வைத்திருக்கின்ற கைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் ஏதாவது பூச்சியோ, புழுவோ அல்லது பறவையோ இருக்கலாம் என்றார். முதல் கேள்வியை சரியாக சொன்ன முதியவரிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்டான் அந்த சிறுவன். தன் கையிலிருந்த பறவை உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து கிடக்கிறதா என்று கேட்டான். அந்த முதியவர் பறவை உயிரோடு இருக்கிறது என்றால் அதனைத் தன் கைகளாலேயே அழுத்திக் கொன்று விடலாம். இறந்து கிடக்கிறது என்று சொன்னால் பறவையைப் பறக்க விடச் செய்து விடலாம் என்று நினைத்தான். இந்த கேள்விக்கு முதியவர் எப்படியும் பொய் சொல்லி விடுவார் என்று நினைத்தான்.

ஆனால் அதற்கு அந்த முதியவர் என்ன சொன்னார் தெரியுமா?. சற்றே சிந்தியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் கீழே செல்லுங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
அதற்கு அந்த முதியவர் அந்த சிறுவனைப் பார்த்து "தம்பி அந்த பறவை உயிருடன் இருப்பதும் இறந்து போவதும் உன்னுடைய கைகளில் இருக்கிறதப்பா" Its all in your hand என்று சொன்னார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். அதனை கேட்டு அந்த சிறுவன் அந்த முதியவரின் அறிவுக் கூர்மையை எண்ணி தலை குனிந்தான்.

பின் குறிப்பு:

ஒரு செயலைத் தொடங்கும் முன்பு நன்கு யோசித்து தொடங்குங்கள். அதே மாதிரி ஒன்றைப் பேசும் முன்பு மிகச் சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாது. நன்றி.



Thursday, March 12, 2009

கண்ணப்பனின் கணக்கு!
















நீண்ட நாட்களாக நீடித்த சஸ்பென்ஸ் நேற்று முடிவுக்கு வந்தது. ம.தி.மு.க வின் அவைத் தலைவர் கண்ணப்பன் தி.மு.க வில் இணைந்தார். அவர் தி.மு.க வில் இணைந்ததன் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் தி.மு.க வில் இணைந்தவுடன் கண்ணப்பன் கூறியதாவது.


முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நலம் பற்றி விசாரிக்க மருத்துவமனை சென்று அவரைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். பிறகு வைகோவிற்கு போன் செய்து அதைப் பற்றிக் கூறினேன். அப்போது வைகோ தன்னிடம் மிகவும் கோபப்பட்டு பேசினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் வந்து நலம் விசாரித்தார். அதனால் மனிதாபிமானத்தின் அடிப்படையில் முதல்வரைச் சந்தித்தேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று வைகோவிடம் கூறினேன். ஆனால் அவர் தன்னிடம் பேச வேண்டாம் எனக் கூறிவிட்டார்.


வைகோ கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் என்னிடம் பேச விரும்பவில்லை எனத் தெரிந்தவுடன் அந்த முயற்சியை நிறுத்தி விட்டேன். லோக்சபா தேர்தல் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மார்ச் 1ம் தேதி செய்தித்தாள் மூலமாக அறிந்தேன். அதை பற்றி என்னிடம் யாரும் கலந்த்தாலோசிக்கவில்லை. வைகோ என்னிடம் பல வகைகளிலும் முரண்பட்டார். நான் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டேன்.


நான் முதல்வரை சந்தித்து குறித்து கருத்து தெரிவித்த வைகோ, நான் தி.மு.க வின் சூழ்ச்சிக்கு இரையாகிவிட்டதாகவும் அதிமுக கூட்டணியை பிளவுபடுத்தும் செயல் என்றும் கூறுகிறார். அதனால் நான் மதிமுக வின் அவைத் தலைவர் பதவியிலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.


பிறகு ஸ்டாலினைச் சந்தித்து தன்னைத் திமுக வில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார். திரு. கண்ணப்பன் அவர்களின் நீண்ட நாள் குழப்பம் ஒருவாறாக முடிவுக்கு வந்தது. திமுக அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்பது கருணாநிதிக்கும், கண்ணப்பன் இருவருக்குமே வெளிச்சம். மதிமுகவை அழிக்க நினைக்கும் கருணாநிதியின் சூழ்ச்சி தொடரும் என்று நம்பலாம். இதற்கு வைகோவின் பதிலடி எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tuesday, March 10, 2009

விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் தந்தேன்


விடுதலைப் புலிகள் முப்பத்தேழு பேரை தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். எழுத்தாளர் மதுராவின் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது வைகோ பேசியதாவது. புலிகளிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருணாநிதி கூறுகிறார். திருடனுக்குக் கூட புலிகளிடம் காசு வாங்கும் எண்ணம் வராது. 37 புலிகளை ஒன்றரை ஆண்டுகள் எனது வீட்டில் வைத்திருந்து, சோறு போட்டு, மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்திருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்குப் பிறகும் ஆறு மாதம் அவர்கள் என் வீட்டில் தங்கி இருந்தனர்.அவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி யார் என்பதை பிறகு கூறுவேன்.

என்னிடம் இருந்த விடுதலைப் புலிகள் சிலர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டனர். 17 பேர் மட்டும் என்னுடன் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்யும் வாய்ப்பு வந்தபோது, அவர்களிடம் இருந்த நச்சுக்குப்பியை என்னிடம் கொடுத்து விடுமாறு கேட்டேன். இரவு முழுவதும் பேசி அவர்களிடமிருந்து நச்சுக்குப்பியைப் பெற்றேன். என் தம்பி, "நான் தான் நச்சுக்குப்பியைப் பாதுகாத்து வைத்திருந்தேன். அது கடமை என கருதினேன்' எனக் கூறி, ஓர் ஆண்டு சிறை சென்றான். அவனுக்கு நான் பதவி வழங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் தாயகத்தையே பார்த்ததில்லை.

புலிகளிடம் நான் காசு வாங்கியதாகக் கூறும் கருணாநிதிக்கு இதயமே கிடையாது. சீமான், நாஞ்சில் சம்பத் மற்றும் கொளத்தூர் மணி பேசியதில் எந்தத் தவறுமில்லை. இவர்கள் எல்லோரும் நாட்டின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் பேசினர். நாட்டின் ஒருமைப்பாட்டில் எங்களுக்கு இல்லாத அக்கறையா?. இவ்வாறு வைகோ பேசினார்.

Monday, March 9, 2009

ஆறாம் பூதம்


வாழ்வு சேறு
காதல் தாமரை

யாக்கை திரி
காதல் சுடர்

உயிர் நதி
காதல் கடல்

பிறவி பிழை
காதல் திருத்தம்

இருதயம் கல்
காதல் சிற்பம்

ஜென்மம் விதை
காதல் பழம்

லோகம் துவைதம்
காதல் அத்வைதம்

சர்வம் சூன்யம்
காதல் பிண்டம்

மானுடம் மாயம்
காதல் அமரம்.

கவிப்பேரரசு வைரமுத்து
நன்றி- கொஞ்சம் தேநீர் நிறைய வானம்.

சின்னத்தம்பி பாடல்கள்


தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட - (தூளியிலே)

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும் (பாட்டெடுத்து)
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

சோறுபோட தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுவேன்
நானழுக தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ளதான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லதான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட -(தூளியிலே)
-------------------------------------*----------------------------------------

பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் காணம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் -(போவோமா)

ஆண் : அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
ஆண் : குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
பெண் : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
ஆண் : பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
பெண் : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண் : அதிசயமான பெண்தானே
பெண் : புதுசுகம் தேடி வந்தேனே - (போவோமா)

பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுகட்டும் குருவியும் அடடடா அதிசயம்
ஆண் : கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியலே
பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
பெண் : போதும் போதும் ஒம் பாட்டு
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு - (போவோமா)
--------------------------------------*-----------------------------------------------

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ - (அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்கள படச்சதாறு
என்னிக்கும் வயசு மூவாறு என்சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ
பூந்தேரோ - (அரச்ச)

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்
சேலப் பூவு கோலம்போடும் ராசிதான்
பல ஜாலத்தோடு ஆடப்போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்கு பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ
பூந்தேரோ - (அரச்ச)
-----------------------------------------*---------------------------------------------

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற
அது எப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?
ஓஓஓஓஓ - (குயில)

ஆண்பிள்ள முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்?
ஒல குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா?
இது தெய்வத்தின் நிந்தனையா?
இத யாரோடு சொல்ல - (குயில)

எல்லார்க்கும் தலமேல எழுத்தொன்னு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாத
போனாலும் வந்தாலும் அதுதான்
ஏழையென் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கைநழுவி
இத யாரோடு சொல்ல - (குயில)

நீலமிருகம்


கடலே
உன் உப்பு
இனி எனக்கு ஆகாது

என் மக்களின் உணவை
எனது உணவில்
சேர்க்க முடியாது

நீலம் நிறம் என்றிருந்தோம்
விஷமென்று
விளங்கிவிட்டது

ஆண்கள்
பெண்கள்
குழந்தைகளைத் தின்று
வாயில் நுரைதள்ள
இன்னும்
வேட்டையாடக் காத்திருக்கும்
தண்ணீர் மிருகமாய்
படுத்துக்கிடக்கிறாய்

உலகெங்கும்
உன் கரையில்
குழந்தைகள் கட்டும்
மணல் வீடுகளில்
இனி ஆவிகள் வசிக்கக்கூடும்

இனி எப்போதும்
உன்னிடம் நான் வரமாட்டேன்
என் மக்களின் கண்ணீரில்
என்னால்
கால் நனைக்க முடியாது

- கவிஞர் பழநிபாரதி

Saturday, March 7, 2009

புதுப்புது அர்த்தங்கள் பாடல்கள்



கல்யாண
மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன் (கல்யாண)
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே (கல்யாண)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜியமே - (கல்யாண)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்து பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என்சோகம் என்னோடுதான் - (கல்யாண)
--------------------------------------------*---------------------------------------------


கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஆஆஆ ....................
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற - (கேளடி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை - (கேளடி)

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது - (கேளடி)
----------------------------------------*---------------------------------------


ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீகக் குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெண் : தினம்தோறும் இரவில் நடுஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண் : அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன்தான்

பெண் : வா வா என் தேவா செம்பூவாய் என்தேகம்
சேராதோ உன் கைகளிலே

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என்மேல் ஒரு போர் தொடுக்க

ஆண் : எனை வந்துத் தழுவு ஏனிந்த பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெண் : பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

ஆண் : மாது உன்மீது இப்போது என்மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

உண்மைத் தமிழனின் கடமை!


அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. இது கௌண்டமணி ஒரு தமிழ்ப்படத்தில் சொல்லும் பிரபலமான வசனம். காலங்காலமாக நம் அரசியல்(சாக்கடை) வாதிகள் நெறி தவறாமல் இந்த வசனத்தின் உண்மையை பின்பற்றி வந்தாலும் தற்போது எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் செல்வி ஜெயலலிதா ஒரு அறிக்கைவிட்டுள்ளார். மார்ச் ஒன்பதாம் தேதி இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறாராம். என்னே ஜெயலலிதாவின் இலங்கைத் தமிழர்களின் மீதான (அரசியல்) பற்று.






















சில வாரங்களுக்கு முன்பு இதே ஜெயலலிதா இலங்கை ராணுவத்திற்கு இலங்கைத் தமிழர்களை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், போர் என்றால் இலங்கைத் தமிழர்கள் மடியத்தான் செய்வார்கள் என்றும் சொன்னார். இப்போது இதே ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்பது ஒவ்வொரு உண்மைத் தமிழனுக்கும் தெரிந்திருக்கும். எங்கே இப்போது நாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் மக்களின் கோபம் தேர்தல் நேரத்தில் தன் கட்சிக்கு எதிராக திரும்பிவிடுமோ என்ற பயத்தில் உண்ணாவிரதம் என்னும் அரசியல் கபட நாடகத்தை அரங்கேற்ற இருக்கிறார்.
















நம்
அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் வேலையை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். மக்களும் இன்றுவரை ஏமாளிகலாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தானே இன்றுவரை தமிழகத்திலுள்ள இரண்டு திராவிட கட்சிகளுமே தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றன. ஒரு தேர்தலிலாவது மக்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இன்று இலங்கைத் தமிழன் இலங்கையில் கொடுங்கோலன் ராஜபக்சேவின் அகோர பசிக்கு இரையாயிருப்பானா?.

வரும் தேர்தலிலும் மக்கள் இதே இரண்டு கட்சிகளுக்கும் தான் மாறி மாறி ஒட்டு போடுவார்கள். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்கள் சாகத்தான் வேண்டும் என்று சொல்வார். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்கள் மீது (அரசியல்) பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்வார். நம்முடைய வைகோ அவர்களோ இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அன்பு இருப்பதாகக் காட்டிக்கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவிடம் தஞ்சமடைவார். என்னே நம் அரசியல் (சாக்கடை) வாதிகளின் இலங்கைத் தமிழர்களின் மீதான பற்று.


நம் கேப்டன் விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று அவருக்கே புரியவில்லை. இலங்கை பிரச்சனையில் நீண்ட நாட்களாக மௌனம் காத்தவர் மக்களின் கோபம் எங்கே தன் மேல் திரும்பிவிடுமோ என்று பயந்து சில நாட்களுக்கு முன்பு (அரசியல்) போராட்டம் நடத்தினார். நம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசைப் பற்றி சொன்னால் வெட்கக் கேடு.

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது வரும் என்று இலங்கைத் தமிழனின் மீது உண்மையான பற்றுள்ள ஒவ்வொரு தமிழனும் உள்ளுக்குள் அழுது புழுங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் உண்மையான தமிழன் ஒவ்வொருவனையும் ஒரு உண்மையான தமிழன் என்ற முறையில் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் யாரும் ஒட்டு போடாதீர்கள். தேர்தல் முடிந்ததும் எத்தனை சதவீதம் உண்மையான தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

Thursday, March 5, 2009

நினைவு


எந்த பெண்ணைப் பார்த்தாலும்
என்னவளின் ஞாபகம் எனக்கு
ஒரு கணமாவது - என்னை
அவள் நினைத்திருப்பாளா?!

என் மனம்!


பூ தேடி செல்லும்
வண்டு போல - உன்னைத்
தேடியே செல்லும்
என் மனம்!

Wednesday, March 4, 2009

பொல்லாதவன் பாடல்கள்



மின்னல்கள்
கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
ஐயோ பைத்தியமே பிடித்ததடி

முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உரையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் படித்தது தூக்கத்திலே
காலை தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறி
தலைகீழாக தொங்கிடுமே
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
ஐயோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதற்றத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஒ ....... குட்டிப்பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போலே
ஏனிந்த தொல்லை என்று தள்ளிப் போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய்போலே

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
ஐயோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஐயோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
ஐயோ பைத்தியமே பிடித்ததடா
--------------------------------------------*----------------------------------------------


படிச்சி பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சி பார்த்தேன் ஏறிடிச்சி
படிச்சி பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சி பார்த்தேன் ஏறிடிச்சி
சிரிச்சி பார்த்தேன் சிக்கவில்ல
மொறச்சி பார்த்தேன் சிக்கிடிச்சி
நாங்க அப்பா காசில் பீரடிப்போம்
எஸ் எம் எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப் பையன்னு பேரெடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்
அப்பா காசில் பீரடிப்போம்
எஸ் எம் எஸ்ஸில் சைட்டடிப்போம்
வெட்டிப் பையன்னு பேரெடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசிலடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்ல
அழக ரசிக்கலன்னா அவன்தான் மனுசனில்ல (படிச்சி)

கல்யாணந்தான் செய்யும் போது பஞ்சாங்கத்த பார்ப்பவனே
காதலிக்க பஞ்சாங்கத்த பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ள பொறக்கும் நேரத்த நீ சொல்ல முடியுமா
ரெண்டு விரலில் சிகரெட்ட வச்சு இழுக்கும் போது தீப்பந்தம்
பழைய சோத்த பொதச்சி வச்சு பருகும் போது ஆனந்தம்
கனவு இல்ல கவலை இல்ல
இவன போல எவனும் இல்ல

இந்த வயசு போனா வேற வயசு இல்ல
அழக ரசிக்கலன்னா அவன்தான் மனுசனில்ல

என்னடி என்னடி முனியம்மா
கண்ணுல மையீ முனியம்மா
யார் வச்ச மையீ முனியம்மா
நான் வச்ச மையீ முனியம்மா

பட்டுசேல கூட்டத்தில பட்டாம்பூச்சி போல வந்து
பம்பரமா ஆடப்போறேன் ஒங்க முன்னால
ஏ மாடி வீட்டு மாளவிகா வாளமீனு போல வந்து
பல்லக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணால
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற நடனமாட போறேண்டா
மல்லுவேட்டி மாப்பிள்ள பையா மச்சான் கூட ஆடேன்டா
புடிச்சி ஆடு முடிச்சி ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சி போடு

இந்த வயசு போன வேற வயசு இல்ல
அழக ரசிக்கலனா அவன்தான் மனுசனில்ல (படிச்சி)
----------------------------------------*------------------------------------


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாலென்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தாலென்ன
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே (வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன்னழகைப் பாட
கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

எந்தன் மனதைக் கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச்செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ ?.... (வெண்மேகம்)

Tuesday, March 3, 2009

பாசமலர் பாடல்கள்


மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே (மலர்ந்தும்)

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் (மலர்ந்தும்)

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா

ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
--------------------------------------*--------------------------------------

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே - (எங்களுக்கும்)

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய்கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன்
பழம் பறிப்போமே - (எங்களுக்கும்)

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுகமும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல்
பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடிமனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே - (எங்களுக்கும்)

நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை
தோல்வியும் இல்லை ..... ஆஆஆஆஆஆஆ - (எங்களுக்கும்)

Monday, March 2, 2009

பாலும் பழமும் பாடல்கள்








என்னை யாரென்று எண்ணிஎண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழியல்லவா (என்னை)

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா
சருகான மலர் மீண்டும் மலராதையா
கனவான கதை மீண்டும் தொடராதையா (2)
காற்றான அவள் வாழ்வு திரும்பாதையா (என்னை)

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா (2)
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா (என்னை)

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா - அவள்
ஒளிவீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வு நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா (என்னை)
------------------------------------------*-------------------------------------------

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
- உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
- நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
- நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
- உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்
- பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
- நானாக வேண்டும்
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்
- நீயாக வேண்டும் (நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
- பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
- விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
- உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேருதும் இல்லை
- வேறேதும் இல்லை (நான் பேச)
---------------------------------------*-----------------------------------------------

பாலும் பழமும் கைகளிலேந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே
பேசி பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே
அன்ன கொடியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமைபோல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண் மலர்வாயே

ஈன்ற தாயை நான் கண்டதில்லை
எனது தெய்வம் வேறெங்கும் இல்லை
உயிரைக் கொடுத்தும் உனைநான் காப்பேன்
உதய நிலவே கண் மலர்வாயே (பாலும்)

ஆலயமணி பாடல்கள்


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா (2)
நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா (சட்டி)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா - (பாதி)
ஆட்டிவைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா (2)
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா (சட்டி)

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்மதேவன் கோயிலிலே ஒளிதுலங்குதடா (2) - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா (சட்டி)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான்
இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா - (எறும்புத்)
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா (2)
இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா (சட்டி)
--------------------------------------*------------------------------------------


பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே (பொன்னை)

ஆயிரம் மலரில் ஒருமலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே (ஆயிரம்)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே (பொன்னை)

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் (பறந்து)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே (பொன்னை)

ஆலமரத்தின் விழுதினைப்போலே
அனைத்து நீயும் உறவு தந்தாயே (ஆலமரத்தின்)
வாழைக்கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே - (பொன்னை)
------------------------------------*---------------------------------

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
களையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா (2) - (கல்லெல்லாம்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனியாக்குமுந்தன் ஒரு வாசகம் (2)
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா -
வண்ணக் கண்ணல்லவா (2)
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா
மின்னல் இடையல்லவா - (கல்லெல்லாம்)

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (2)
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (2)
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
(கல்லெல்லாம்)

Sunday, March 1, 2009

எம் ஜி ஆர் பாடல்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான் - (கொடுத்ததெல்லாம்)

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும்
தெய்வம் கொடுத்தில்லை- (கொடுத்ததெல்லாம்)

படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை - (கொடுத்ததெல்லாம்)

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடிநிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் -(கொடுத்ததெல்லாம்)

உயிர் வலி


மறக்க முயற்சிக்கின்றேன்
முடியவில்லை
உயிர் வலிக்கின்றது
தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்படும்
அகதி போல......