tag:blogger.com,1999:blog-10078850936888145312024-03-05T11:14:09.081+05:30My thoughtsVenkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-16514204128198243412013-02-12T11:35:00.002+05:302013-02-12T11:35:17.082+05:30சென்ற வாரம் நீயா நானா பார்த்தேன். அருமையாக இருந்தது. ஒரு பக்கம் நன்கு படிக்கும் மாணவர்களும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இருந்தனர். நடுவர் கோபிநாத் மாணவர்கள் பக்கம் பார்த்து இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனை என்னவென்று கேட்டார். அதற்கு மாணவர்கள் ஊழல், அரசியல்வாதிகளின் செயல்பாடு, இட ஒதிக்கீடு என்று சொல்லிக்கொண்டே போனார்கள். கூடன்கூளத்தில் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு மாணவர்கள், அணு உலை வேண்டும் என்றார்கள். ஆனால் ஒருவரிடமும் அங்கே உண்மையாக என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவரின் (உதயகுமார்) பின்னால் பல ஊர்கள் திரண்டு வருகிறதென்றால் அந்த ஊரில் உள்ளவர்களெல்லாம் முட்டாள்களா?
இன்னொன்று இட ஓதிக்கீட்டு பிரச்சனை. இட ஒதிகீட்டை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு சிலரைத் தவிர எல்லோருமே கையை தூக்கினார்கள். காரணம் கேட்டால் அது எங்களையெல்லாம் பாதிக்கிறது என்றார்கள். குறைந்த மதிப்பெண் பெற்ற தாழ்ந்த சாதி மாணவர்களெல்லாம் இதனால் பயன்பெறுகிறார்கள் என்றார்கள்.இந்த தாழ்ந்த ஜாதி மக்களால் இவர்களும் இவர்களுடைய முன்னோர்களும் எவ்வளவு பயனடைந்தனர் என்று இவர்களுக்கு தெரியவில்லை. இன்றும் கூலிகளாக இருக்கும் நிறைய பேர் இந்த தாழ்ந்த ஜாதி மக்கள்தான். இவர்களால்தான் இன்று நாம் சாப்பிடுகிறோம். இப்படி பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இனம் மற்ற உயர் ஜாதி (?) வகுப்பினருக்கு சமமாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த இட ஒதிக்கீடு தொடங்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு மாணவருக்கும் தெரியவில்லை. எல்லா விசயங்களையும் மேலோட்டமாகவே பார்கிறார்கள்.
நான் நல்லாயிருந்தால் சரி என்று சுயநலமாகவே சிந்திக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் அப்படி இருந்தால் போகட்டும். ஆனால் நாளைய எதிர்காலமான மாணவர்கள் ஒரு விசயத்தை மேலோட்டமாக பார்ப்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் எத்தனை கிராமங்களில் இரண்டு டம்ளர் முறை இருக்கிறது? ஊரையும் சேரியையும் பிரிக்கும் சுவர் இருக்கிறது? இதெல்லாம் இன்றைய அறிவில் சிறந்த சமூகத்திற்கு தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சமூகத்தை ஏற்ற தாழ்வுகள் இல்லாத சமூகமாக மாற்றுவது படித்த நம் போன்ற இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அதானால் தான் மற்றும் தன் குடும்பம் மட்டும் நல்ல இருந்தால் போதும் என்று சுயநலமாக இருப்பதை விட்டுவிட்டு எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுநலமாக சிந்தித்தால் அது நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்கும் உபயோகமாக இருக்கும். வீடு நலம்பெறும் நம் நாடும் நலம்பெறும்.
http://www.youtube.com/watch?v=QubyOMCTkHcVenkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-45542674546452063772012-08-29T14:52:00.002+05:302012-08-29T15:16:53.727+05:30ஆறாம் அறிவுஅன்றும் எப்போதும் போல 4.45 மணிக்கு எழுந்துவிட்டான் நவீன். ஐந்து மணியிலிருந்து ஐந்தரை மணிவரை அவன் நடைபயிற்சி செய்யும் நேரம். விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுது அவனுக்கு சற்றே புதிதாய் தோன்றியது. ஆங்காங்கே "கொக்கரக்கோ" என்று சேவல் கூவுவதும், எங்கோ ஒரு நாய் "வௌவ்" என்று ஊளையிடுவதும் அவனுக்கு மிகத்தெளிவாய் கேட்டது. முகத்தைக் கழுவிக்கொண்டு, காலில் ஷூவை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் நவீன்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-FGOKsEgeNnbFvGghl_QnXHLSQFlACNqVLP5q33rcxkfa3weRn7PIeImKjy0swlmXA29I48pRxIDdGTFeNeT0us2iyWupZTMyUmTTwTrvNKD4q0g3reTcAg8yuwJmbaqgyZK6OXixcTeG/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="194" width="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-FGOKsEgeNnbFvGghl_QnXHLSQFlACNqVLP5q33rcxkfa3weRn7PIeImKjy0swlmXA29I48pRxIDdGTFeNeT0us2iyWupZTMyUmTTwTrvNKD4q0g3reTcAg8yuwJmbaqgyZK6OXixcTeG/s400/2.jpg" /></a></div>
அவனுடைய வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பூங்கா உள்ளது. பூங்காவின் பெயர் "சுந்தரவனம்" பூங்கா. பெயருக்கேற்றாற்போல், எங்கும் அடர்ந்த மரங்களும், ஆங்காங்கே அழகிய மலர்களுமாய் மனதைக் கொள்ளை கொள்ளும்படி இருந்தது. கல்மனம் படைத்த மனிதன் கூட அந்த பூங்காவினுள் நுழைந்தால் திருந்தி நல்மனம் படைத்தவன் ஆகிவிடுவான். மனிதனே, என்னைப்பார்! ஒரே நாளில் பூத்து உதிரும் நான் எப்படி முகம் மலர்ந்து, அகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீயோ தினமும் கவலைகளில் மூழ்கி, முகம் சோர்ந்து, அகம் சோர்ந்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கும் ஒரே வாழ்க்கைதான்; உனக்கும் ஒரே வாழ்க்கைதான். அந்த ஒரு வாழ்கையை என்னை மாதிரி சிரித்துகொண்டே வாழு என்று சொல்லாமல் சொல்லி கண்சிமிட்டியது அங்கிருந்த ஒரு ரோசாப்பூ.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGwrB1Os1tUmmdskFhiRe8L0vj77d8QSe1Zzf5_i16L1tEjfo9P21GhOhiUFbddn8KtpM2P2TAUkRkN7TkDdyuO9UtlTR-GLgpvTtq46NBydfY-fK2NkwDDyGO23tKFC62px9evH58jmMK/s1600/3704479467_ec178e4b61_z.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="302" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGwrB1Os1tUmmdskFhiRe8L0vj77d8QSe1Zzf5_i16L1tEjfo9P21GhOhiUFbddn8KtpM2P2TAUkRkN7TkDdyuO9UtlTR-GLgpvTtq46NBydfY-fK2NkwDDyGO23tKFC62px9evH58jmMK/s400/3704479467_ec178e4b61_z.jpg" /></a></div>
நவீன் தினமும் அந்த பூங்காவரை நடந்து வந்து, பூங்காவினுள் சிறிது நேரம் அமர்ந்து, இயற்கையை ரசித்துவிட்டு பிறகு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. அந்த நாளை அவன் உற்சாகமாய்த் துவங்க அது உதவியது. ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. வேறொரு காரணமும் இருக்கிறது. அது அந்த பூங்காவினுள் இருக்கும் ஒரு நாய். நாயைப் பற்றி நினைவுகள் வந்ததும் நவீனின் எண்ணங்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தன.<br></br>
சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல அதிகாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தான் நவீன். அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. அவனைப் போலவே சிலர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். சாலையில் அவ்வப்போது சில கார்களும், பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. நவீன் பூங்காவை நெருங்கினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைப் பரிதாபப்பட வைத்தது. சாலையின் ஓரமாக ஒரு நாய் "வௌவ்" "வௌவ்" என்று தன் உயிர் கரையும் மட்டும் கத்திக்கொண்டிருந்தது. அதன் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதன் ஒரு காலில் பலமாக அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு வாகனம் மோதிச் சென்றிருக்க வேண்டும்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC7TEMAiE_eqYbF0F2IjwujlUi2o3NuZRQ5UeUPRh7flgOctWYHGrnfNNB9ycYhYwHlOhlQqrMfcSPRCHX-RcRGfdUBtWZzzEGU3lH3Vzr1FRY8rBK5mwbh1OXbZHAdpF0kFVvkbJfDtz8/s1600/retriever_in_garden_dog_wallpapers-1024x768.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="300" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC7TEMAiE_eqYbF0F2IjwujlUi2o3NuZRQ5UeUPRh7flgOctWYHGrnfNNB9ycYhYwHlOhlQqrMfcSPRCHX-RcRGfdUBtWZzzEGU3lH3Vzr1FRY8rBK5mwbh1OXbZHAdpF0kFVvkbJfDtz8/s400/retriever_in_garden_dog_wallpapers-1024x768.jpg" /></a></div>
நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் அந்த நாயை வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். மனிதர்கள் செத்துக்கிடந்தாலே கண்ணிருந்தும் குருடராய் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் கல்மனம் படைத்த இந்த கலிகாலத்தில் ஒரு நாய் துடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருப்பது அவனுக்கு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் நவீனால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு நாய் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு மனிதன் அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. நாய்க்கும் மனிதனுக்கும் அங்கே அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் காற்றைத் தான் சுவாசிக்கின்றன. உயிரின் மதிப்பை அறிந்தவன் ஒரு சிறு புழு பூச்சி துடித்துக்கொண்டிருந்தாலும் கண்ணின் ஓரம் ஈரம் கசிவான். உயிரின் வலியை உணர்ந்தவன் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான். ஒரு உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்டும் காணாமல் செல்வது அந்த உயிரைக் கொல்வதற்குச் சமம்.<br></br>
மனிதாபிமானம் என்பது சட்டம் இயற்றியோ அல்லது தண்டனைகள் தருவதாலோ வருவதில்லை. அப்படி வந்தால் அது பயத்தினாலேயன்றி உள்ளத்தால் அல்ல. உள்ளத்தால் உயர்ந்தவராலேயே ஒரு உயிரின் மதிப்பை உணர முடியும். நவீன் சற்றும் யோசிக்கவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாயைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்து சென்றான். வீட்டிற்குச் சென்றதும் அந்த நாயின் காலைச் சுத்தமாகக் கழுவி அடிபட்ட இடத்தில் மருந்திட்டு கட்டுபோட்டு வீட்டின் ஓரத்தில் கிடத்தினான். நாயின் கண்ணோரத்தில் இன்னும் சிறிது கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நாய் அவனை ஒரு கனிவான பார்வையில் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பார்வை அவனை ஏதோ செய்வது போல் இருந்தது. அப்படியே அந்த நாயை கட்டி அனைத்துக் கொண்டான். அவன் மனம் மிகவும் லேசாகி, நெஞ்சம் குளிர்ந்து, உயிர் கரைவது போல் இருந்தது. அவனின் அப்போதைய மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த உலகத்தில் வாழும் நவீனை போன்ற சில உள்ளங்களாலேயே அதை உணர முடியும்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPsYr8_gzaBlFiwhzZzcz7pTWTef7VG3GjC-50mlDJPXABVFvbB1Clv99Tc5400Ltunom4HWhbIIzrrg6ntXMkFVFnCfs1dAqfJuOl0vec8Ni7NYmGCWCkDZPNf3AlKXD2kZsXM7HXkBBq/s1600/Corbis-42-18937771.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="267" width="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPsYr8_gzaBlFiwhzZzcz7pTWTef7VG3GjC-50mlDJPXABVFvbB1Clv99Tc5400Ltunom4HWhbIIzrrg6ntXMkFVFnCfs1dAqfJuOl0vec8Ni7NYmGCWCkDZPNf3AlKXD2kZsXM7HXkBBq/s400/Corbis-42-18937771.jpg" /></a></div>
நவீன் அந்த நாய்க்கு "ராம்" என்று பெயர் வைத்தான். பிறகு அந்த நாய் சற்று தேறியதும் அதனை கொண்டுபோய் அந்த பூங்காவினுள் விட்டுவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நாய் தினமும் காலையில் நவீனின் வருகைக்காக காத்திருப்பதும், அவன் வந்தவுடன் அவன் தோளில் ஏறி விளையாடுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒருநாள் அவன் வரவில்லையென்றால் அது அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தது போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும். அதனால் அதை பார்ப்பதற்காகவே தினமும் அவன் வருவான். சற்று நேரம் அந்த நாயுடன் கொஞ்சிவிட்டு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அந்த நாய்க்கும்தான்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgneUU9MXSjvm46JKq9M8I0GLFc0pLuZqcggnxIzktgSwe6oqO2DZqGQKHPvnMLJGq_MldUHCR0PxgcQiI3LVRV8ZkWFwFQjbpXYBQ_XVoBobwx7EFW0NQkf-ecQw6JaP1ItJZ2g1kmeZFM/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="189" width="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgneUU9MXSjvm46JKq9M8I0GLFc0pLuZqcggnxIzktgSwe6oqO2DZqGQKHPvnMLJGq_MldUHCR0PxgcQiI3LVRV8ZkWFwFQjbpXYBQ_XVoBobwx7EFW0NQkf-ecQw6JaP1ItJZ2g1kmeZFM/s400/1.jpg" /></a></div>
இப்படி கடந்த கால நினைவுகளில் மூழ்கி போனவனாய் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். பூங்காவிற்கு அருகில் வந்துவிட்டான். ராம் அவனின் வருகையை மிகுந்த ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. நவீன் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து மீளாதவனாய் சாலையோரத்தில் இருந்து விலகி சாலைக்கு நடுவில் சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து அந்த சாலை வழியே ஒரு "லாரி" மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. பூங்காவிற்கு அருகில் இருந்த ராம் இந்த காட்சியைப் பார்த்து திகிலடைந்தது. ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதன் உள்மனம் பதறியது. நவீன் இன்னும் புற உலகிற்குள் வராதவனாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். ராம் தன் உயிர் கரையும் மட்டும் கத்திகொண்டிருந்தது. ஆனால் நவீன் இன்னும் அகவுலகில் இருந்து மீளவில்லை. லாரி நவீனை மோத இருந்த சமயத்தில் ராம் பாய்ந்து சென்று நவீனை ஓரமாக தள்ளிவிட்டது.<br></br>
ராம் தள்ளிவிட்டதில் சிறிய சிராய்ப்புகளுடன் கீழே விழுந்து கிடந்தவன் எழுந்து பார்த்தபோது அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச்செய்தது. அங்கே ராம் லாரியின் சக்கரத்தில் அடிபட்டு தலை நசுங்கி அந்த இடத்திலேயே செத்துக்கிடந்தது. நவீனுக்கு எல்லாம் கனவு போலத் தோன்றியது. அப்படியே சாலையோரமாக சரிந்து விழுகிறான். மனதில் எண்ண அலைகள் ஓடியது. முன்னொரு நாள் அந்த நாய் அடிபட்டு கிடந்தபோது அதற்கு யாரும் உதவ முன்வராததும்; இன்று தான் செய்த ஒரு சிறிய உதவிற்கு நன்றிக்கடனாய் தன்னைக் காப்பாற்றிவிட்டு அது உயிரைவைட்டதும்; மனிதன் தன்னை ஆறு அறிவுடையவனாக நினைத்து பெருமை பேசிக்கொள்வதும்; மற்ற விலங்குகளை அறிவில் தன்னைவிட தாழ்ந்த பிறப்பாக கருதுவதும்; இப்படி என்னென்னவோ அவன் மனதில் தோன்றியது.<br></br>
இன்று அவனுக்கு உண்மையிலேயே யார் உயர்ந்தவர்கள் என்று விளங்கியது. அவன் சுயநினைவு திரும்ப மிக நீண்ட நேரம் ஆயிற்று.
Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-67606629839635431532010-07-19T12:10:00.003+05:302010-07-19T12:32:14.148+05:30கருணாநிதியின் கொள்கை!கலைஞர் கருணாநிதியின் டாப் டென்:<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTlFfjpG43r7-LVZoaoSAk29cTpcFnwdiaEM572LLQeqVQILPDQK5iGQRfMicOYSvs273Mih2GujMrCC49LU1GHSn7bZYelyFHh7lO2GPzNgaxJ_zPcLdbUXWZHQOxfgeG1JdgxManrKUt/s1600/karun.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 374px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTlFfjpG43r7-LVZoaoSAk29cTpcFnwdiaEM572LLQeqVQILPDQK5iGQRfMicOYSvs273Mih2GujMrCC49LU1GHSn7bZYelyFHh7lO2GPzNgaxJ_zPcLdbUXWZHQOxfgeG1JdgxManrKUt/s400/karun.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495508287255436450" /></a><br />1 .பிடித்தது: தம் மக்கள்<br />2 .பிடிக்காதது: தமிழக மக்கள்<br />3 .கனவில் வருபவர்: எதிர்க்(எதிரிக்)கட்சி தலைவர் ஜெயலலிதா<br />4 .பிடித்த பொருள்: பேனா<br />5 .கொள்கை: பகுத்தறிவு (பிறருக்கு மட்டும்)<br />6 .சாதனை: அனைத்திலும் இலவசம், குடும்பம் முழுவதையும் ஆட்சியில் அமர வைத்தது<br />7 .தொழில்: தினசரி அறிக்கை விடுவது, அடிக்கடி விழா நடத்தி தன்னைப் பற்றி துதிபாட வைப்பது<br />8 .உபதொழில்: சினிமாவிற்கு திரைக்கதை, வசனம் எழுதுவது<br />9 .பிடித்த நாடு: தமிழ்நாடு<br />10 .பிடிக்காத நாடு: என்றுமே குடைச்சல் தரும் இலங்கைVenkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-81178035714563258102010-07-17T12:47:00.009+05:302010-07-17T14:15:27.436+05:30என்னை எழுத தூண்டியது...நான் ப்ளாக் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது எழுத வேண்டிய கட்டாயம். சென்னையில் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஏற்கனவே பலமுறை இம்மாதிரியான சம்பவங்களை பார்த்திருந்த போதிலும் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை வலைப்பதிவில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. சரி விஷயத்திற்கு வருவோம்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhECcDAT5cn8XTBORi7tLI_Viapwr_XFZE0bfIXfOWBy_n0JTSvTqgfAtXGhqx4ojJeAg1DEmE_3veTQQhi4WRhKssVe_e1Qd2_-tEVgJJOdbU1zryGVKF87Wt0pQ8SXsajfAHf32iOVFI1/s1600/beggar.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 368px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhECcDAT5cn8XTBORi7tLI_Viapwr_XFZE0bfIXfOWBy_n0JTSvTqgfAtXGhqx4ojJeAg1DEmE_3veTQQhi4WRhKssVe_e1Qd2_-tEVgJJOdbU1zryGVKF87Wt0pQ8SXsajfAHf32iOVFI1/s400/beggar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494792274141298834" /></a><br />ஒரு மாலைப்பொழுது. நேரம் சுமார் 6.30 pm இருக்கும். திநகர் சரவணா ஸ்டோர்ஸ் -இல் துணிமணிகள் எடுத்துக் கொண்டு வேளச்சேரியில் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்ல திநகர் பேருந்து நிலையத்தில் 5A பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது பேருந்து நிலையத்தின் ஓரத்தில் சுமார் 80 வயதான பாட்டி ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். மிகவும் தளர்ந்த தேகம். சுருங்கிவிட்ட தோள்கள். ஒடுங்கிவிட்ட கண்கள். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒட்டிய வயிறு. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த காட்சியைப் பார்த்தால் கண்ணீர் வரும். எனக்கும் வந்தது. நான் மனிதன். ஒரு சிலர் அந்த பாட்டி வைத்திருந்த தட்டில் ஒன்று இரண்டு என்று போட்டு சென்றனர். நான் என் பையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த பாட்டியின் கையில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் யோசித்து பார்த்தேன். அந்த பத்து ரூபாயை வைத்து அந்த பாட்டி ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்று நினைத்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அந்த பாட்டியின் கையில் வைத்துவிட்டு வந்தேன்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaozgk05-Y5mGNwBkZuKdDxfMmo2iqsmZtTggGXAXPyaYmrTJO7_LZypNzkWEnNcBPQbXnch0GG1u7XJJglGXjnZhtzrJq5uY_3psXzF43tgxe_HJ0TE2DXAzSnZS-iMBhaEfbpfTuTasf/s1600/family.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaozgk05-Y5mGNwBkZuKdDxfMmo2iqsmZtTggGXAXPyaYmrTJO7_LZypNzkWEnNcBPQbXnch0GG1u7XJJglGXjnZhtzrJq5uY_3psXzF43tgxe_HJ0TE2DXAzSnZS-iMBhaEfbpfTuTasf/s400/family.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494792277292537922" /></a><br />5A பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டேன். பேருந்து திரும்பும்வரை அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றேன். மனதில் எண்ண அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தன. அந்த பாட்டியைப் போல எத்தனை பேர் அனாதைகளாக சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். கடைசி காலத்தில் தான் பெற்ற மகன் தன்னைக் காப்பாற்றுவான் என்று எண்ணியிருந்த அந்த தாயின் எண்ணங்களே அந்த மகனுக்கு பெருஞ்சாபமாக மாறாதா? தன்னுடைய கடைசிகாலத்தில் தன் மகன் தன்னையும் அனாதையாக விடக்கூடும் என்று யோசிக்க தெரியாதா?அனாதையாக விடப்பட்ட அந்த தாயின் கண்ணீர், பிற்காலத்தில் அந்த மகனின் கண்களில் ரத்தக்கண்ணீராய் வெளிப்படக்கூடும். திநகர் பேருந்து நிலையத்தில் பார்த்த பாட்டியிடம் என் தாயைப் பார்த்தேன். அனாதைகளாக விடப்பட்ட ஒவ்வொரு முதியவர்களிடமும் என் ரத்த சொந்தங்களைப் பார்க்கிறேன். என்னுடைய இந்த எண்ணங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ஒத்துப்போகும் என்று நினைக்கின்றேன்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWPSFZgAGLh-Yb3T5r-pK-vZSfD5C-MqrAlgTSRU5CM1do8fqE_FjXgA0aNeD03EKol5dR5n6DFs1wsG4uozOoZJZZHXdAvAgIyDZxN7NKqrhTnhz44vyjbohlhtkYWYL2mO3UQz8m6D5c/s1600/Teacher_0.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWPSFZgAGLh-Yb3T5r-pK-vZSfD5C-MqrAlgTSRU5CM1do8fqE_FjXgA0aNeD03EKol5dR5n6DFs1wsG4uozOoZJZZHXdAvAgIyDZxN7NKqrhTnhz44vyjbohlhtkYWYL2mO3UQz8m6D5c/s400/Teacher_0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5494792287192204994" /></a><br />சமீபத்தில் இப்படி அனாதைகளாக விடப்பட்ட வயதான ஒருவரின் புகாரின்பேரில் அவருடைய மகனைக் கைது செய்தது சென்னை மாநகராட்சி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இதனால் அந்த மகன் உண்மையிலேயே தன் தவறை உணர்வானா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பள்ளிபருவத்திலேயே பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. சான்றோர்களை மதித்தல்; பெற்றோர்களிடம் தினமும் ஆசிபெறுதல்; தாய்நாட்டை நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பிற்காலத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வருவார்கள். இதற்கான பொறுப்பு அரசிடமும், ஆசிரியர்களிடமும் உள்ளது.ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மனசாட்சியின்படி நடந்துகொண்டால் அநாதைகளே இல்லாத இந்தியா மிக விரைவில் மலரும் என்பது திண்ணம்.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-652662075602851632010-03-07T19:40:00.009+05:302010-03-07T21:10:57.474+05:30உன்னைக் கைவிடமாட்டேன் - ஒரு பக்க கதை..<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9bah_htMcMZrUhYMsK19Mjsud3V1kwamJohWhVN1_mYKCyf9QiLKIaq0wY2L-9cqjO2BooyJ4YQuk025KaUMEXhGpYzKBIeLxLGrDhfrVkr3Sp-8yKhEptzpf8dW9itacm-23ujtBvX6g/s1600-h/boy_and_girl_on_dunes.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 269px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9bah_htMcMZrUhYMsK19Mjsud3V1kwamJohWhVN1_mYKCyf9QiLKIaq0wY2L-9cqjO2BooyJ4YQuk025KaUMEXhGpYzKBIeLxLGrDhfrVkr3Sp-8yKhEptzpf8dW9itacm-23ujtBvX6g/s400/boy_and_girl_on_dunes.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445912879236156946" /></a><br /><br />அன்று சிறுவர்கள் அந்த அழகிய கிராமத்துத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் போலீஸ் விளையாட்டு. அதாவது ஒருவன் தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் எங்காவது சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். ஒளிந்து கொண்டவர்களைக் கண்ணைமூடிக்கொள்பவன் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் விளையாட்டு. கண்ணை மூடிக் கொள்பவன் போலீஸ். நம்ம ஊரில் நடப்பது போல. ஆனால் நம்ம போலீஸ் கொஞ்சம் திறமைசாலி. ஹீரோவாச்சே. ஓடி உஷாராக ஒளிந்து கொள்பவர்கள் திருடர்கள். இப்போது நம்ம ஹீரோ கண்ணை திறந்து கொள்கிறான். எதிரில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு நாதியில்லை.<br /><br />நீண்ட நேரம் அலைந்து தேடியும் எந்த திருடனையும் பிடிக்க முடியவில்லை நம்ம ஹீரோவால். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏதோ ஒரு உருவத்தின் நிழல் அசைவதைக் கண்டான். அவன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. திருடன் அகப்பட்டுவிட்டான் என்ற சந்தோஷத்தில் அந்த வீட்டை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடி அந்த வீட்டின் வாசலை அடைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன்னுடைய பென்சில் பாக்ஸ்-ஐ எடுப்பதற்காக ஒரு நாற்காலியில் ஏறி தேடிக்கொண்டிருந்தாள். நம்ம ஹீரோ வந்த அதிர்ச்சியில் அந்த சிறுமி பயந்து நாற்காலியில் இருந்து தவறி விழப்போனாள். விழப்போன அந்த சிறுமியை நம்ம ஹீரோ தாங்கிக் கொள்கிறான்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXF0nN4hNCnjylBtb9W038RbayL-Tw1cDkzqdkPxrfkR3esTurGNuMHKXtwpF86PauJwl6cBn-qUvmRB6ruZRhRx-esNC9fU5SDpfIYPm5feYY0t5NCibWrGY0R0_pEs0siDwgSsLkzXpg/s1600-h/girl_boy_love1239213285.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 321px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXF0nN4hNCnjylBtb9W038RbayL-Tw1cDkzqdkPxrfkR3esTurGNuMHKXtwpF86PauJwl6cBn-qUvmRB6ruZRhRx-esNC9fU5SDpfIYPm5feYY0t5NCibWrGY0R0_pEs0siDwgSsLkzXpg/s400/girl_boy_love1239213285.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445912870810995202" /></a><br /><br />கொஞ்ச நேரம் நம்ம ஹீரோ அந்த சிறுமியை தன் கைகளில் தாங்கியபடியே அவளுடைய அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னை இறக்கி விடும்படி கூறுகிறாள். ஹீரோவும் அவளை இறக்கி விடுகிறான். அவளின் பெயர் என்னவென்று கேட்கிறான். தமிழரசி என்கிறாள். அவளின் பெயர் அவளைப் போலவே அழகாக இருப்பதாக கூறுகிறான். அவள் சிறிதாக புன்னகைக்கிறாள். அவனுடைய பெயர் என்னவென்று கேட்கிறாள். தமிழரசன் என்கிறான். அவள் சிரிக்கிறாள். சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நம்ம ஹீரோவுக்கு நேரம் ஆகிவிட்டது. ஏதாவது ஒரு திருடனைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவளிடம் இருந்து விடைபெற்று கொள்கிறான்.<br /><br /><br />சிறிது நேரத்தில் ஒரு திருடனைக் கண்டுபிடித்து விடுகிறான். ஆட்டம் முடிகிறது. மறுபடியும் புது ஆட்டம். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட திருடன்தான் போலீஸ். அவன் மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸ் கண்ணை மூடிக் கொள்கிறான். மற்றவர்கள் ஓடி மறைந்து கொள்கிறார்கள். நம்ம ஹீரோ ஹீரோயின் வீட்டை நோக்கி ஓடுகிறான். வாசலில் நின்று கொண்டிருந்த நம்ம ஹீரோயின் அவன் வருவதைக் கண்டு நாற்காலியில் ஏறிக் கொள்கிறாள். ஹீரோ வீட்டில் நுழைந்தவுடன் அவள் நாற்காலியில் இருந்து தவறி விழுகிறாள். நம்ம ஹீரோ அவளைத் தாங்கிக் கொள்கிறான். அவளுக்குத் தெரியும் தன் தலைவன் தன்னைத் தாங்கிக் கொள்வான் என்று...Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-73941446180716442992010-03-06T15:55:00.001+05:302010-03-06T15:57:06.861+05:30புத்தகம் எழுதுவது எப்படி?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeZmhW9hDFwY92QSdbWOnC4SENdb8_FWAb9yAAwlIm_b2LB1fCszUcjEwV1iCGGTuzfaH_lUDSQAmHycbZmifAca3096hRNaDbN2jsaULOr-aSc2yiZPRTlFJP8ZgkKkm52XtjV72qIPxl/s1600-h/write.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeZmhW9hDFwY92QSdbWOnC4SENdb8_FWAb9yAAwlIm_b2LB1fCszUcjEwV1iCGGTuzfaH_lUDSQAmHycbZmifAca3096hRNaDbN2jsaULOr-aSc2yiZPRTlFJP8ZgkKkm52XtjV72qIPxl/s400/write.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320437759590646530" border="0" /></a>உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையா?. அப்படியென்றால் இதனை சிறிது நேரம் படியுங்கள். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். அது விளையாட்டாக இருக்கலாம்; நெட்டில் அரட்டை அடிக்கலாம்; பூங்காவிற்கு செல்லலாம்; பிளாகில் கிறுக்கலாம் (என்னை மாதிரி);<span> சினிமாவிற்கு</span> செல்லலாம்; இப்படி நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் புத்தகம் எழுத ஆரம்பிப்பது. ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் உங்களுக்கு கொஞ்சம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் புத்தகம் எழுத ஆரம்பிக்காதீர்கள்.<br /><br />எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதமாவது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் மிக்க நலம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் இருந்தால் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நிச்சயம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உதாரணமாக சிலருக்கு காதல் காதல் கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு தன்னம்பிக்கை கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் மற்றும் மனிதர்களின் நிஜங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். இவை சில உதாரணங்கள் தான். இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2LefTI5yPpVcp-qil-MrMCNPiW_8U7YYCgesd9S76fpXy6Ql69-mbh9fbLg93a8ThBEl5c_bqraGeRRs70YosGiimCuslu3_TsjC5CWX1WtFFawnE7N8fMscCVmB6vcjzHS_7z2RlER76/s1600-h/window.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 230px; height: 280px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2LefTI5yPpVcp-qil-MrMCNPiW_8U7YYCgesd9S76fpXy6Ql69-mbh9fbLg93a8ThBEl5c_bqraGeRRs70YosGiimCuslu3_TsjC5CWX1WtFFawnE7N8fMscCVmB6vcjzHS_7z2RlER76/s400/window.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320437754937498162" border="0" /></a><span><span><span><span><span>உதாரணத்திற்கு</span></span></span></span></span> நீங்கள் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தினமும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்வீர்கள். ரயிலில் பயணம் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பேரை காணக் கூடும். அவர்களின் செயல்கள் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பல எளிமையான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். நான் பேருந்தில் பயணம் என்று சொல்வது சென்னையில் பயணம் செய்வதை அல்ல. சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வதைத்தான் சொல்கிறேன். சென்னையில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கற்பனையும் வரவில்லை. அதற்கு சில அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.<br /><br /><br /><span><span><span><span><span>சரி</span></span></span></span></span>. இப்போது நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊர் போய் சேர குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். இதில் முக்கியமான ஒன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்வது அவசியம். அப்போதுதான் வெளி உலகை ரசிக்க முடியும். உலகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். காணும் மனிதர்களின் உள்ளங்களைக் களவாட முடியும். அவர்களின் மனதில் வழிந்தோடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். பாடும் பறவைகளின் ஓசையை ரசிக்க முடியும். கூவும் குயில்களின் கூரிய இசையை சந்திக்க நேரிடும். சாலையோரத்தில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களின் நிஜ வாழ்க்கையின் நிஜத்தினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதில் உள்ள சந்தோஷங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் என பலவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள். நானும் நிறைய முறை மாடு மேய்த்து இருக்கிறேன். இப்போது வீட்டுக்கு சென்றாலும் நான் மாடு மேய்ப்பேன்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgptMLUAD-fpcz7XvJZEDx6SwBP1MsferGfLkHfU8Y_4scFV39jxsiaa2KYgKCiKErDvMjDjnzro6c2bC4RmfxbNP-81cTJxyzNIsYHl0lOsKtUIL6YwJQcKR2MmQEB4Mq9izAiUFlCNBdL/s1600-h/boy+with+goat.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgptMLUAD-fpcz7XvJZEDx6SwBP1MsferGfLkHfU8Y_4scFV39jxsiaa2KYgKCiKErDvMjDjnzro6c2bC4RmfxbNP-81cTJxyzNIsYHl0lOsKtUIL6YwJQcKR2MmQEB4Mq9izAiUFlCNBdL/s400/boy+with+goat.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320437754807891314" border="0" /></a><br />நான் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஆடுமாடுகள் மேய்க்கும் சிறுவர் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அதே சமயம் அதே அளவு வருத்தமும் இருக்கும். அவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆசைகளை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் என இப்படி பல வருத்தங்கள் எனக்குள் இருக்கும். அவர்களின் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அவர்களின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக <span>ஆசை. </span>ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. நான் நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதர்களின் உள்ளங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிறைய மனிதர்களை சந்தியுங்கள். நகரத்து மனிதர்களை அல்ல; கிராமத்து மனிதர்களை. எளிமையான மனிதர்களை. குக்கிராமங்களுக்கு பயணம் செல்லுங்கள். அங்கு வாழும் எளிமையான, உண்மையான, கருப்பு உருவத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்களை, குடிக்க நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுக்கும் சங்க காலத்து விருந்தோம்பல் மிக்க மனிதர்களிடம் பேசிப் பழகுங்கள். பிறகு நீங்களே எழுத வேண்டாம் என்று நினைத்தால் கூட உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.<br /><br />சரி. முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக எழுத ஆரம்பிக்கலாம். ஒரே அடியாக பெரிய புத்தகமாக எழுத நினைக்காதீர்கள். முதலில் ஒரு ஐந்து பக்கம் அல்லது பக்கம் கொண்ட சின்ன கட்டுரை எழுதிப் பழகலாம். நீங்கள் எழுதியதை மற்றவர்களிடம் காட்டி கருத்துகள் கேட்கலாம். அவருக்கும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். சிலர் உங்கள் முயற்சியை கேலி செய்யலாம்.<span> அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்; அவர்களை அலட்சியப்படுத்திவிடுங்கள். நீங்கள் <span>எழுதியதை </span></span>பத்திரிகை எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். அவர்களின் உதவியை நாடலாம். நீங்கள் நல்ல சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள். நான் கூறியது உங்களுக்கு சிறிதளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.<br /><br />பின்குறிப்பு:<br /><br />கவிப்பேரரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படியுங்கள். மிகச் சிறந்த நூல். விலை அதிகமில்லை. நூற்று பத்து ரூபாய்தான்.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-56054497509619900242010-03-05T17:10:00.019+05:302010-03-05T18:48:25.801+05:30மனிதனை மனிதனாய்ப் பாருங்கள்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzn37P_sBFkQ52k6bTuwpYWUnCsrL2zjY8W1WWextWMvq2BLcty37njl8jli2gltl4_e9tMz6mF4CHJxQnaX35fUNLSM-jC-V4af2kK9yzzx7On3kJXd3556q2BWgl23KyGLis9MXGeKkb/s1600-h/Paramahansa+Nityananda.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzn37P_sBFkQ52k6bTuwpYWUnCsrL2zjY8W1WWextWMvq2BLcty37njl8jli2gltl4_e9tMz6mF4CHJxQnaX35fUNLSM-jC-V4af2kK9yzzx7On3kJXd3556q2BWgl23KyGLis9MXGeKkb/s400/Paramahansa+Nityananda.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5445134144361708706" border="0" /></a><br />சாமியார்கள் என்றாலே சந்தி சிரிக்கிறது. சாமியார்கள் என்றாலே காமியார்கள் என்றாகிவிட்ட பிறகு வேறென்னே சொல்ல?. சுவாமி (?!) நித்யானந்தரின் காமலீலைகள் நமக்கு அதைத்தான் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ இது புதிய பிரச்சனை <span>அல்ல</span>. அநேகமாக நாள்தோறும் போலி சாமியார்களைப் பற்றிய வேண்டதகாத செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் நம் மக்களின் மனநிலை மாறுவதாக இல்லை. படிக்காத பாமர மக்களில் இருந்து படித்த பணக்காரர்கள் வரை சாமியார்களின் கால்களில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிய காமெடி என்னவென்றால் நம் தமிழக அரசியல்வாதிகளே சாமியார்களின் புகழைப் பாடுவதுதான். இந்த சாமியார் எனக்கு தன் மந்திர சக்தியால் மோதிரம் தந்தார்? செயினை தந்தார்? என்று பகுத்தறிவு இயக்கமான திமுக அமைச்சர்கள் காமெடி அடிக்கிறார்கள். பிரேம்ஜி ஸ்டைலில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_HlIcj-Rr7ZvdFtPSBeFU4RqVgsLgEut79QrCMDPo30YmhbGqFGAQ2flSGvJZBEGYi3nxl32aBQtlLEe-5VpSjuLHj1jQT48IxmYoNLmxDwEQP9a-rS4ThrI1Lq7RjvYaKSxRwG3PuN_H/s1600-h/terasa.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_HlIcj-Rr7ZvdFtPSBeFU4RqVgsLgEut79QrCMDPo30YmhbGqFGAQ2flSGvJZBEGYi3nxl32aBQtlLEe-5VpSjuLHj1jQT48IxmYoNLmxDwEQP9a-rS4ThrI1Lq7RjvYaKSxRwG3PuN_H/s400/terasa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5445134152081837330" border="0" /></a><br /><br />சாமியார்கள் ஆகிவிட்டாலே அவர்களைப் பணக்காரர்களாக மாற்றிவிடுவது நமது மண்ணின் பெருமை போல. நம் நாட்டில் உள்ள சாமியார்களில் 99 சதவீத சாமியார்கள் காமியார்களாகத்தான் இருக்கிறார்கள். மீதி இருக்கிற ஒரு சதவீத சாமியார்கள் (சந்நியாசிகள்) நமக்கு தெரியாதவர்களாக இருக்கின்றனர். அதுதான் பிரச்சினை. தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ளாமலிருப்பதும்; தெரிந்து கொள்ள கூடாததை தெரிந்து கொள்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஆதி காலம் முதலே நமக்கு விளங்காத விஷயமாகிவிட்டது. கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது மனிதன் கடவுளைப் படைத்தானா?. இதற்கும் பதில் இல்லை. ஆத்திகர்கள் கடவுள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லது. இருந்து கொள்ளட்டும். அப்படி இருக்கையில் அவர்கள் அந்த கண்ணுக்கு தெரியாத கடவுளை கும்பிடட்டும். ஏன் கண்ணுக்கு தெரிகிற சா(கா)மியார்களை கும்பிடுகின்றனர். நாத்திகர்கள் இந்த வகையில் மிகவும் போற்றத்தக்கவர்கள். கண்ணுக்கு தெரியாதவற்றை நம்ப அவர்கள் தயாராக இல்லை.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAToHYkQiyGbcFKOJqBr_X-d2x0GL0EYwYMbCPZmP9Z2wv5N7rsk8PubkRR8Oxn3VouSRbYrxYsfK6St5oL6Jrx9hrj7-OH68oT3_-FhGyHNN3dPmdErQ827AMCsEvwsEmk1PISSjPtJ6Z/s1600-h/therasa.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 368px; height: 238px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAToHYkQiyGbcFKOJqBr_X-d2x0GL0EYwYMbCPZmP9Z2wv5N7rsk8PubkRR8Oxn3VouSRbYrxYsfK6St5oL6Jrx9hrj7-OH68oT3_-FhGyHNN3dPmdErQ827AMCsEvwsEmk1PISSjPtJ6Z/s400/therasa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5445134159553537042" border="0" /></a><br />சுவாமி விவேகனந்தர் கூட இதையே சொல்கிறார். மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கும் நாட்டிற்கு ஆத்திகத்தைவிட நாத்திகமே மேல் என்று?. இன்று நம் நாட்டில் சாமியார்கள் என்றாலே ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். கடவுள் என்ற ஒன்றே மனிதன் தன் மனசாட்சிக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பதற்கு படைக்கப்பட்ட ஒரு பொருள் என்று நிறைய நூல்களில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் என்பது என் கருத்து. இல்லையென்றால் இவ்வளவு கூத்து நடந்த பின்பும் அந்த கடவுள் வானத்தில் இருந்து இறங்கி வரவில்லை என்றால் அப்புறம் என்ன அவர் கடவுள்?.<br /><br /><br />மனிதனை மனிதனாய்ப் பாருங்கள். கடவுளாக அல்ல. பிறகு நீங்களே உங்களைக் கடவுளாக உணர்வீர்கள். எப்போதும்...ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் தோன்றுமானால் இந்த பூமி உருவம் உள்ள கடவுள்களின் பூந்தொட்டியாய் மாறும். நன்றி...Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-46609501725503254052009-12-21T18:26:00.009+05:302009-12-21T19:29:41.986+05:30அவதார்- திரைவிமர்சனம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjort3ZUgHtPatv4V-q-4HZdb44HFd-TdjrF6YiI2J-UzEx_TGrrDl55jUzCcJegfRVI_RxXwGnuI86PqrbHwRC1zfG1i-E9OQHH3V_4j4grETaRbS9w4w14oFarEgocAnWY6LAvC3Mt-yg/s1600-h/avatar-movie-poster.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjort3ZUgHtPatv4V-q-4HZdb44HFd-TdjrF6YiI2J-UzEx_TGrrDl55jUzCcJegfRVI_RxXwGnuI86PqrbHwRC1zfG1i-E9OQHH3V_4j4grETaRbS9w4w14oFarEgocAnWY6LAvC3Mt-yg/s400/avatar-movie-poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417685870875690610" /></a><br />நேற்று தேவி தியேட்டரில் "அவதார்" திரைப்படம் பார்த்தேன். நான் அவ்வளவாக ஆங்கில படம் பார்ப்பதில்லை. பார்க்க விருப்பமுமில்லை. நண்பர்கள் இன்டர்நெட்டில் புக் செய்துவிட்டதால் வேறு வழியில்லாமல் செல்ல நேரிட்டது. ஆனால் படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு கிடைத்த திருப்தி..அப்பப்பா..அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. படத்தை பார்த்தால்தான் அதை உணரமுடியும். சரி கதைக்கு வருவோம்.<br /><br />வேற்று கிரகத்தில் இருக்கும் விலைமதிக்க முடியாத மினரல்களைக் கவர்ந்துபோக அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிட திட்டமிடுகிறது. அதற்கு அந்த கிரகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாக வேண்டும். அதற்காக அந்த மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள நம்ம ஹீரோ (சாம் வொர்திங்டன்) தேர்ந்தெடுக்கபடுகிறார்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9vIGw31zz0GlUJJLC8hiDWtBy5Wt0lSirzpSF0FlDDTccEO11e6uXkOBzQTBYnIYHxC8pHzrKPmVhpYypFyEqv8Wf0BeajYUlX8QBlm29sj6a5EmDjdGdE9O4xnbYnv8RCjgOwIIZi1wz/s1600-h/avatar-navi-blue-photo2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9vIGw31zz0GlUJJLC8hiDWtBy5Wt0lSirzpSF0FlDDTccEO11e6uXkOBzQTBYnIYHxC8pHzrKPmVhpYypFyEqv8Wf0BeajYUlX8QBlm29sj6a5EmDjdGdE9O4xnbYnv8RCjgOwIIZi1wz/s400/avatar-navi-blue-photo2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417685877133207314" /></a><br />வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் உருவத்தில் மிகவும் வித்தியாசமானவர்கள். சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் மிகவும் உயரமாக, பெரிய காதுகளோடு, பின்னால் வாலோடு இருப்பவர்கள். அதனால் அவர்களோடு சேர்ந்து பழக நமது ஹீரோவின் ஒரு ஜீனை எடுத்து க்ளோனிங் செய்து, அந்த க்ளோனிங் ஹீரோவை அனுப்புகிறார்கள்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg15yArb_k5qeo9IrBwRTrBS4iB8VDcThlTYBEaPtMckUOfCV3sLcwyFYDCzAVs0ZWFH9LivbiPsr7RU7gFt5icnpQxgrUiOlb_XTbhLfIZqlA_fPFNcGuprfdIBTUm7vnEOvvxVmmMArHb/s1600-h/avatar1_thumb%5B5%5D.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 385px; height: 257px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg15yArb_k5qeo9IrBwRTrBS4iB8VDcThlTYBEaPtMckUOfCV3sLcwyFYDCzAVs0ZWFH9LivbiPsr7RU7gFt5icnpQxgrUiOlb_XTbhLfIZqlA_fPFNcGuprfdIBTUm7vnEOvvxVmmMArHb/s400/avatar1_thumb%5B5%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417685853638378610" /></a><br />நம்முடைய ஹீரோ அந்த கிரகத்தில் இருக்கும் பண்டோரா என்னும் அடர்ந்த காட்டிற்குள் நுழைகிறார். அந்த காடு பல விசித்திரங்களை தன்னுள்ளே கொண்டது. தொங்கும் மலைகளும், விசித்திரமான விலங்குகளும், கலர்கலர் பூச்சிகளும் நிறைந்த அழகிய காடு. சாதாரண மக்களால் அந்த காட்டில் சுவாசிக்க முடியாது. அந்த காட்டில் நுழையும் நம் ஹீரோவை அந்த கிரகத்தில் வாழும் ஒருத்தி (அதான்...நம்ம ஹீரோயின்) காப்பாற்றி, அந்த கிரகத்தில் உயிர் பிழைத்திருக்க வேண்டிய விஷயங்களைக் கற்று கொடுக்கிறாள். இரண்டு பெரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். நம் ஹீரோ அந்த மக்களோடு அன்பாக பழகுகிறான். தான் வந்த நோக்கம் அழிந்து அந்த மிக அழகிய கிரகத்தையும், அதில் வாழும் மக்களையும் காப்பாற்ற முயல்கிறான்.அவனுக்கு உதவியாக மேலும் நான்கு பேர் வருகிறார்கள்.இதனிடையே அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிடுகின்றன. அமெரிக்க படைக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே பயங்கர சண்டை மூள்கிறது. இறுதியில் யார் வென்றார்கள் என்பது கிளைமாக்ஸ்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie4MuCH6P9mYeBWJNjc-XjeM5QBpLFVyk7tVaecEOisLGFRw3Tb9Randk_nacJPejySqfTf9VMSRfeYB5jRdGb_3PVr6eXu0jdd75dMlccqB9GjYKxl1tCT_4m7BUxKSgePzZjh7gmcd_l/s1600-h/avatar-movie-2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 202px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie4MuCH6P9mYeBWJNjc-XjeM5QBpLFVyk7tVaecEOisLGFRw3Tb9Randk_nacJPejySqfTf9VMSRfeYB5jRdGb_3PVr6eXu0jdd75dMlccqB9GjYKxl1tCT_4m7BUxKSgePzZjh7gmcd_l/s400/avatar-movie-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417685866977812946" /></a><br />ஜேம்ஸ் கேமரூனின் மிக பிரம்மாண்ட படைப்பு "அவதார்". சுமார் 500 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பிரம்மாண்டம். படத்தின் ஒளிப்பதிவு படத்தைப் பல மடங்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். கதை, நாம் ஏற்கனவே பல தமிழ் படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதை எடுத்த விதம் சூப்பர். டெக்னிகலாக மிரட்டியிருக்கிறார்கள்.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1RF_7J6B8G_u_N3kWWS7jhpOkxq0d5dAtXLJqfU2lgWanJ2PcwEU3sciGcjzqjLFZ5FzONu-cEcsP4mlrjiWjtbg60kAI-V6W_JNeCiGKOAyTYPj8pGpq1mmipOA3OGNKo2fP2R1XGEoY/s1600-h/avatar11_thumb%5B9%5D.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1RF_7J6B8G_u_N3kWWS7jhpOkxq0d5dAtXLJqfU2lgWanJ2PcwEU3sciGcjzqjLFZ5FzONu-cEcsP4mlrjiWjtbg60kAI-V6W_JNeCiGKOAyTYPj8pGpq1mmipOA3OGNKo2fP2R1XGEoY/s400/avatar11_thumb%5B9%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417685864355108610" /></a><br /><br />தேவி தியேட்டரில் படத்தை 2D -யில் காண்பித்தார்கள். மறுபடியும் நாளை மறுநாள் சத்யம் தியேட்டரில் 3D -யில் பார்க்க நண்பர்களிடம் சொல்லியாகி விட்டது. கண்டிப்பாக அனைவரும் "திரையரங்கம்" மட்டுமே சென்று பார்க்க கூடிய திரைப்படம் "அவதார்".<br /><br />அவதார்- பிரம்மாண்டத்தின் பிறப்பிடம்.<br /><br />பின்குறிப்பு:<br /><br />இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் "வேட்டைக்காரன்" படத்தை பார்க்கலாமென்று இருந்தேன். ஆனால் "அவதார்" படத்தைப் பார்த்தவுடன் அந்த முடிவை மாற்றி கொண்டேன்.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-50877831673606480432009-08-05T18:51:00.003+05:302009-08-05T19:11:25.142+05:30களவாடிய பொழுதுகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQMLAmOEsn7APV_hpzB0hdA33y2506VpKjkp70ulib31AmBQlzfKCCoeCxtevCvEPtniQWfwuZCrSUYl7Qm8RUCV3W8Ts0vt_Fghkn_LjviXn1F8fH4PE9-yiYkS_MxjcraNfj9bvtkgf4/s1600-h/Anini-Lovers.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 375px; height: 249px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQMLAmOEsn7APV_hpzB0hdA33y2506VpKjkp70ulib31AmBQlzfKCCoeCxtevCvEPtniQWfwuZCrSUYl7Qm8RUCV3W8Ts0vt_Fghkn_LjviXn1F8fH4PE9-yiYkS_MxjcraNfj9bvtkgf4/s400/Anini-Lovers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5366474124094003410" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கடற்கரை மணல்திட்டுகளில்<br />காலில் மணலூற-நாம்<br />களவாடிய பொழுதுகள்<br />கருகிப் போனதடி<br />என் கண்ணே!<br /><br />மடிமீது தலைவைத்து<br />மனதை வான்வைத்து-அழகு<br />மயில்போல மறைந்த<br />மாலை பொழுதுகள்<br />மீண்டும் திரும்புமோ<br />என் கண்ணே!<br /><br />கன்னம் திருப்பினாய்<br />செவ்விதழில் முத்தமிட்டேன்<br />பொய்யாய் அடித்தாய்-சிறு<br />பொய்யாகவேனும் புலருமோ<br />அந்த பொழுதுகள்<br />என் கண்ணே!<br /><br />இரவைச் சுட்டெரித்த<br />சூரியன் போல- நம்<br />பிரிவை சுட்டெரிக்க<br />நினைவுகள் ஒன்றே போதும்<br />என் கண்ணே!Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-17142457031569734222009-08-04T16:36:00.003+05:302009-08-04T17:13:51.536+05:30திரைப்பட ரசிகர்களின் வன்மம்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGsKqjdbOpyVc8YSkYYcG3yhqFxDI_lq3tUjRz43bdvYnZpNdHLYzcfHu6ZHY1BlloFv2B5te92dqSdPnhEswniwrZMPrO02qbYAoTzx8jnLqaog92vhEIInuI9emvJvIce6jTgEVWahEY/s1600-h/subramaniapuram-wallpaper.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGsKqjdbOpyVc8YSkYYcG3yhqFxDI_lq3tUjRz43bdvYnZpNdHLYzcfHu6ZHY1BlloFv2B5te92dqSdPnhEswniwrZMPrO02qbYAoTzx8jnLqaog92vhEIInuI9emvJvIce6jTgEVWahEY/s400/subramaniapuram-wallpaper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5366072507500170562" /></a><br />சமீபத்திய சில படங்களின் வெற்றி என்னை பாதித்திருக்கிறது. குறிப்பாக சுப்ரமணியபுரம் மற்றும் நாடோடிகள். தமிழ் திரைப்பட ரசிகர்கள் இத்தகைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவைப் பார்க்கும்போது எங்கே அவர்களின் உள்ளங்களிலும் அத்தகைய வன்மம் இருக்குமோ என்ற பயம் எழுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனர் சசிகுமார் ஒருவனுடைய தலையை ஆடு அறுப்பது போல் அறுக்கும் காட்சிக்கு ரசிகர்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தபோது அப்படிதான் எனக்கு தோன்றியது. அதே மாதிரி நாடோடிகள் படத்தில் இரண்டு காதலர்கள் சில காரணங்களால் பிரிந்து விடுகின்றனர். அவர்களை சேர்த்துவைத்த நண்பர்கள் அவர்களை கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்வதையும் வெகுவாக ரசித்தனர் ரசிகர்கள்.<br /><br />படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது சில விஷயங்கள் நன்றாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அதை சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அதனுள் இருக்கும் வக்கிரம் புரிய வரும். திரைப்படங்கள் மக்களை எளிதாய் சென்றடையக் கூடிய ஒரு மீடியா. அதில் நல்லதும் இருக்கும். தீயதும் இருக்கும். மக்களாகிய நாம்தான் எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிய வேண்டும். மக்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்ல வேண்டியது இயக்குனர்களின் கடமை. மக்கள் மனதில் வன்மங்களை வளர்க்க அவர்கள் காரணமாக இருக்க கூடாது. இயக்குனர்களின் படைப்புரிமையில் தலையிட நான் இங்கே வரவில்லை. மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsPqYkOa3rier7EG79g2U3T5EjZdKK-0d68LMSgwyb4K_w-FmmI8aHelmIDrb6jOy1XCIWOLJh1ockLTglH3anYWorgQYEyl1A68q9tJmlHvqbqTRsuSZkNr1zg4cLA3FLjZduedLXeWpJ/s1600-h/9b0ed_Nadodigal.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsPqYkOa3rier7EG79g2U3T5EjZdKK-0d68LMSgwyb4K_w-FmmI8aHelmIDrb6jOy1XCIWOLJh1ockLTglH3anYWorgQYEyl1A68q9tJmlHvqbqTRsuSZkNr1zg4cLA3FLjZduedLXeWpJ/s400/9b0ed_Nadodigal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5366072501921224322" /></a><br />காதல் செய்யும் காதலர்கள் பிரிவது என்பது நம் நாட்டில் தினமும் நடக்கின்ற ஒரு கேவலமான விஷயமாக மாறிவிட்டது. அதற்காக தாங்கள் சேர்த்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை கடத்தி துன்புறுத்துவது என்பது முட்டாள்தனமான செயல். அதை ரசிகர்கள் ஏற்றுகொள்கிறபோது மனதில் ஒருவித நெருடல். இனிவரும் படங்களிலாவது மக்கள் இத்தகைய காட்சிகளை ரசிக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இயக்குனர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-45341414340416539242009-07-26T11:05:00.009+05:302009-07-26T11:24:56.108+05:30அழகிய திருமுகம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvv-JK2hL4qaAajj9nMwdWEn1VrYY4xuKF0R_kg2dEKCHGCtj_su_JhO5K3i0PG1CVztmun7cN20FCFa4sr1aSisVp9KMAM5LQxLlD98bmoQiIL9D-1j2Q8JsclkS-MMuD6NXC-f0k9r95/s1600-h/2124201641_6f9f325d30.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvv-JK2hL4qaAajj9nMwdWEn1VrYY4xuKF0R_kg2dEKCHGCtj_su_JhO5K3i0PG1CVztmun7cN20FCFa4sr1aSisVp9KMAM5LQxLlD98bmoQiIL9D-1j2Q8JsclkS-MMuD6NXC-f0k9r95/s400/2124201641_6f9f325d30.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362642946840535634" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />தெருவோரம்<br />நடந்து செல்கையில்<br />தெய்வத்தினும் அழகிய<br />திருமுகத்தைப் பார்த்தேன்<br /><br />சிரித்த தெனைப்பார்த்து<br />சிரித்தேன் அதைப்பார்த்து<br />கண்ணடித்த தெனைப்பார்த்து<br />கண்ணடித்தேன் அதைப்பார்த்து<br />கைநீட்டி அழைத்தது<br />கையருகில் சென்றேன்<br /><br />இருகைகளையும் உயர்த்தியது-தூக்கி<br />மார்போடு இருத்திக் கொண்டேன்<br />முத்தமிட்டது கன்னத்தில்<br />முத்தமிட்டேன் அதன் கன்னத்தில்<br /><br />நேரமாகிவிட்டது எனக்கு<br />செல்லவேண்டும் ஓரிடம்<br />இறக்கி விடைகொடுத்தேன்<br />பிரிய மனமில்லாமல்<br /><br />தெருகடந்து செல்லும்வரை<br />திரும்பி நடந்தேன்<br />தெய்வத்தினும் அழகிய-அந்த<br />திருமுகத்தைப் பார்த்தபடி....Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-24695116695046131392009-07-23T20:31:00.008+05:302009-07-24T20:38:48.626+05:30அவள் அன்று விடுமுறை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitzwC2Um_ra2PJVwtLBdrnniCAt4Oml_r_yCxMyQxyhyZdLOh7zF4qLhX4edAQvLuggSk7-KgRRKKSjL1rl0NEopAN8qOjjsOsOKTRnqpWc8NOGex54BLBKek4xKHgE7s7WLjPdtR1PWIi/s1600-h/untitled.bmp"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitzwC2Um_ra2PJVwtLBdrnniCAt4Oml_r_yCxMyQxyhyZdLOh7zF4qLhX4edAQvLuggSk7-KgRRKKSjL1rl0NEopAN8qOjjsOsOKTRnqpWc8NOGex54BLBKek4xKHgE7s7WLjPdtR1PWIi/s400/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5362043488668063570" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />மனம் மயக்கும்<br />மாலை வேளையில்<br />மனம் அலைபாய்ந்தது<br />அவளை எண்ணி...<br /><br />அலுவலகத்தில் நாளை<br />அவளிடம் பேச வேண்டும்-என<br />ஆவல் கொள்ளும்<br />என் மனம்...<br /><br />மனதின் ஆற்றல்<br />மகாவல்லமை-என<br />மறுநாள் உணர்த்தியது<br />அவள் அன்று விடுமுறை.....Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-57940264271075176472009-07-09T15:05:00.005+05:302009-07-09T16:02:08.720+05:30புதிய தேடல்.....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW42ZlMyWe4yfBZEKwQY_58RGTGifjieGFvdpcd3pFZZ9EHGmsHmMpJcafDdDy9YjOIF0EC2QuSmnE4NdESGUxHeJ-q_x4c8K50MJHVnDRuBFbYxEvJe4aHcmFHZIHxR1cwGOQN7icmaJb/s1600-h/G2132~Mother-and-Children-Posters.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW42ZlMyWe4yfBZEKwQY_58RGTGifjieGFvdpcd3pFZZ9EHGmsHmMpJcafDdDy9YjOIF0EC2QuSmnE4NdESGUxHeJ-q_x4c8K50MJHVnDRuBFbYxEvJe4aHcmFHZIHxR1cwGOQN7icmaJb/s400/G2132~Mother-and-Children-Posters.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5356404719099073794" /></a><br />நேற்று சைதை ராஜ் தியேட்டரில் 'பசங்க' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மிக குறைவான அளவே எடுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. சிறுவர்களுக்கான ஹாலிவுட் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சிறுவர்களுக்கான படம் எத்தனை வருகின்றது என்று பார்த்தால் மிக அதிகமாக இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் இருக்கும். இத்தகைய நிலை மாற வேண்டும். சிறுவர்களுக்கான படங்கள் நிறைய வெளி வர வேண்டும். அது தமிழ் சினிமாவிற்கு நல்லது.<br /><br />சிறுவர்களுக்கான படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதால் வசூலும் கூடும். அது சிறுவர்களுக்கான நல்ல பாடமாகவும் இருக்கும். 'பசங்க' படம் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் அழகாக, சுவாரஸ்யமாக சொல்கிறார். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது அவர்களுடைய உள்ளம் உடைந்து போகிறது. அது கொடுமையான விஷயம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiCt6Z3e__XkmrKAd2LwEsJIFXzjjiKQElsW9iFeQ27lFgRnyIKSHc5EDJiU1xCLqP3ZLaKxl7v6B2yyCXihyphenhyphenGsetCLMhilrnagQXoh6mzx0ZsWGyeAKoI6iRGOsVkXxo52lfI6DCk5ksu/s1600-h/child-thinking_~ks123636.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 220px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiCt6Z3e__XkmrKAd2LwEsJIFXzjjiKQElsW9iFeQ27lFgRnyIKSHc5EDJiU1xCLqP3ZLaKxl7v6B2yyCXihyphenhyphenGsetCLMhilrnagQXoh6mzx0ZsWGyeAKoI6iRGOsVkXxo52lfI6DCk5ksu/s400/child-thinking_~ks123636.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5356404719064837730" /></a><br />குழந்தைகள் செய்யும் செயல்களுக்கு பாராட்டு கிடைத்து விட்டால் அது அவர்களை உற்சாகப்படுத்தும். அது அவர்களை மேதைகளாய் உருவாக்க வழிவகுக்கும். சிறுவர்கள் செய்யும் எந்த செயலையும் அலட்சிய படுத்தாதீர்கள். உங்களின் லட்சியங்களை அவர்களின் மேல திணிக்காதீர்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு ஒன்றுதான் சிறுவர்கள் எதிர்பார்க்கும் மருந்து. அந்த மருந்தை அவர்களுக்கு முடிந்த மட்டும் ஊட்டுங்கள்.<br /><br />பெற்றோர்கள் தங்களுக்குள் இருக்கும் சண்டையை குழந்தைகளின் முன்னால் வெளிப்படுத்தாதீர்கள். அது அவர்களை மனரீதியாய் பாதிக்கும். நாமும் பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவேனும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இன்றைய சூழ்நிலையில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வருவதற்குள் இரவு நேரமாகிவிடுகிறது. பிள்ளைகள் அவர்களிடம் பேச வந்தால் தனக்கு அசதியாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிறிது சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுகின்றனர். பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் சகவாசம் எப்படி என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதில்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtbbiI2dxci1cYnQhl-FcPzYkT26d-Gh-T-Iyx4SqVZPu0_QqX56lK-coBgidEF1XEQp3Vy_nrpS_rIzi7reVILOF786joWemKzhG3bLkJjx61BawCQsawaQrRGA1GSBS28FwJh2DxDRlJ/s1600-h/children.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtbbiI2dxci1cYnQhl-FcPzYkT26d-Gh-T-Iyx4SqVZPu0_QqX56lK-coBgidEF1XEQp3Vy_nrpS_rIzi7reVILOF786joWemKzhG3bLkJjx61BawCQsawaQrRGA1GSBS28FwJh2DxDRlJ/s400/children.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5356405175258093586" /></a><br />இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி உயர்ந்தவர்களாய் உருவாவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிள்ளைகள் தாத்தா பாட்டிகளிடம் நல்ல கதை கேட்டு வளர்ந்தனர். எனக்கு என்னுடைய அம்மா நல்லதங்காள் புராணத்தையும், என்னுடைய அப்பா ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை சொல்லி வளர்த்ததும் இன்றும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக அவையெல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க பெறுவதில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை கூறுகின்றனர். இன்றைய சிறுவர்களே நாளைய இளைஞர்கள். இந்தியா வல்லரசாக ஆவது அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். அது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் மேல் அன்பு செலுத்தி அவர்களை வருங்கால வல்லரசு இந்தியாவின் தூண்களாய் உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்....Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-58369046528105861172009-07-07T14:51:00.004+05:302009-07-07T15:00:18.779+05:30கடவுள்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIYynFJ4BEDNetg6xk3e4_2u31p2qT77TEEvg7NdOdrIs6xo4vGLmPneAq8XysMdqFvGUlc0SQFftbJHTQMqGmP_GJ5UY5HsV3coRm1KmAW6vNo9VE-dzuXbTjlG_m6CWgCjGYygoTHLUD/s1600-h/mother-and-child-1a.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIYynFJ4BEDNetg6xk3e4_2u31p2qT77TEEvg7NdOdrIs6xo4vGLmPneAq8XysMdqFvGUlc0SQFftbJHTQMqGmP_GJ5UY5HsV3coRm1KmAW6vNo9VE-dzuXbTjlG_m6CWgCjGYygoTHLUD/s400/mother-and-child-1a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5355648153201571954" /></a><br />கடவுள் இல்லையென்று<br />யார் சொன்னது?<br />உன்னைப் படைத்த தாயின்<br />பெயர் என்ன?<br /><br />- வெங்கடேசன்Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-58233542645986682312009-07-06T19:06:00.007+05:302009-07-06T20:10:04.608+05:30இன்பம் துன்பமற்ற வாழ்க்கை!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oLql4ZCX3ZgkFo6_T6-I7rF1hDa9x0aaXnFPIe0fO13mz4e8WNlc1F1bvfUQKIguK5X_POZMw-yO0YidNrAeaA9sVOXWQTqzctz6fptngLboxDHJc5Oszralbl3N8Zze5sXH5UkGG9CD/s1600-h/BG+Krishna+instructs+Arjuna.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oLql4ZCX3ZgkFo6_T6-I7rF1hDa9x0aaXnFPIe0fO13mz4e8WNlc1F1bvfUQKIguK5X_POZMw-yO0YidNrAeaA9sVOXWQTqzctz6fptngLboxDHJc5Oszralbl3N8Zze5sXH5UkGG9CD/s400/BG+Krishna+instructs+Arjuna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5355356052249634082" /></a><br />மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே நம் மரணத்தின் கடைசி நொடி வரை நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வருந்துவதும் மனித இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்களை துன்பங்களே ஆட்டுவிக்கின்றன. நமக்கு வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்குமே நாம்தாம் காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியிருந்தும் நாம் துன்பத்தின் வாயிலில் சென்று சிக்கிக் கொள்கிறோம். அதற்கு காரணம்தான் என்ன? ஒரு சிறிய அலசல்.<br /><br />ஒரு வேலையை நாம் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலையை பற்றின்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அந்த வேலையின் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். பற்றின்றி செய்ய வேண்டும் என்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. எடுத்த வேலையை ஏனோ தானோ என்று செய்வதற்கு பற்றின்றி வேலை செய்தல் என்பது பொருள் இல்லை. ஒரு செயலை எந்த பற்றும் இல்லாமல், அதாவது அந்த வேலைக்கு அடிமையாகாமல், அதன் பந்தத்திற்கு உள்ளாகாமல், அதன் முடிவு பற்றிய பயம் இல்லாமல், முழு மூச்சோடு அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போது அந்த வேலையை நாம் நன்றாக செய்ய முடியும். அந்த செயலின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் அதனால் மகிழ்ச்சி கொள்ள மாட்டோம். முடிவு பாதகமாக இருந்தாலும் அதனால் நாம் வருத்தம் கொள்ளவும் மாட்டோம். காரணம் நாம் பற்றின்றி வேலை செய்கிறோம்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIjlmctoZFc1fphJkKWCSpCrcVt1ReGsyHOWw4ocUAiCOQeQx6t8XxK433c_nJAe3YArGkK839hhttah-0oSlI3pGrpeOKdG_5-gTw_T-EQJEk9jsq_Qpuz4zsFE36ChkZQNpOskO7s7mw/s1600-h/vive.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 186px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIjlmctoZFc1fphJkKWCSpCrcVt1ReGsyHOWw4ocUAiCOQeQx6t8XxK433c_nJAe3YArGkK839hhttah-0oSlI3pGrpeOKdG_5-gTw_T-EQJEk9jsq_Qpuz4zsFE36ChkZQNpOskO7s7mw/s400/vive.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5355356055827377666" /></a><br />எந்த ஒரு வேலையையும் என் உடம்பு செய்வதில்லை. நான் என்ற என் ஆன்மா இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்ய செய்ய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்மை இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நம்மை நெருங்குவதில்லை. காரணம் நாம் அந்த செயலை ஆன்மாவால் செய்கிறோம். ஆன்மா இன்பம் துன்பம் ஆகிய எதுவுமே அறியாதது. ஆன்மா நிலையானது, அழிவற்றது. இந்த உடம்பு நிலையற்றது. கண்டிப்பாக ஒருநாள் அழியக் கூடியது. உடம்பு அழியும்போது ஆன்மா வேறொரு உடலைத் தேடி செல்கிறது.<br /><br />இப்படி ஒரு செயலைப் பற்றில்லாமல் செய்ய முயற்சிப்போம். பிறகு நம்மை இன்பம் துன்பம் எதுவுமே கட்டுப்படுத்தாது. எந்த ஒரு மனிதன் இன்பம் துன்பம் ஆகிய நிலைகள் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றானோ, அந்த மனிதன் ஒரு செயலை ஆன்மாவால் செய்கிறான் என்று அர்த்தம். அவன் முழு சுதந்திரம் உடையவனாக இருக்கின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.<br /><br />மேலே சொன்ன கருத்துக்கள் கீதையின் மையக் கருத்தாகும். அதனைக் கடைப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் கடைபிடித்தால் உங்களுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. ஆன்மாவில் நிலைபெற்று விட்டீர்கள். அடுத்த பிறவியும் இல்லை. காரணம் உங்களுக்கு ஆசைகள் இருப்பதில்லை. ஆசை இருக்கும் வரை உங்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் ஆசையில்லாமல், பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்படுகிறது.<br /><br />நான் ஏதோ கீதையை உபதேசிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். கீதையில் நான் படித்த எனக்கு பிடித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மேலே கூறியவற்றை கடைபிடிக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். வாசித்தமைக்கு மிக்க நன்றி....Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-85869351677162929762009-07-02T19:26:00.013+05:302009-07-02T19:46:33.511+05:30கவிதைகள்<strong>கடவுள்:</strong><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7IS5VQn8DLxms5irmu6nshE7cNdHAecjYjEfKf5ES95yfMHrbi4uj2usw3Ef-FxCx986n7kg1xT9zXFDG-jo_UtqBs9vvM9X1sL443_S3Hn6dz4MNXobYIEBbtmNrHtozoWAC37nI-lNA/s1600-h/god.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 360px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7IS5VQn8DLxms5irmu6nshE7cNdHAecjYjEfKf5ES95yfMHrbi4uj2usw3Ef-FxCx986n7kg1xT9zXFDG-jo_UtqBs9vvM9X1sL443_S3Hn6dz4MNXobYIEBbtmNrHtozoWAC37nI-lNA/s400/god.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353864424127081202" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />என்ன வரம் வேண்டும்?<br />என்றார் கடவுள்.<br />அதுகூடத் தெரியாத<br />நீர் என்ன கடவுள்?<br /><br /><strong>நன்றி - கவிஞர் நீலமணி</strong><br /><br /><strong>தண்டனை:</strong><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi4y1jU02Je5Rj2wqD4xtPE6PSaLCoP1DYrYYkitZGFPCK_a90CEnFhAbpkFuqLSm7OHmshccdSSfGp5cPq1-zJbTZgYOfB1Tx7J1VU8srsv-KKPyFeVKfujLWxCwgWQWQPRxNGv1s3RDH/s1600-h/lips.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi4y1jU02Je5Rj2wqD4xtPE6PSaLCoP1DYrYYkitZGFPCK_a90CEnFhAbpkFuqLSm7OHmshccdSSfGp5cPq1-zJbTZgYOfB1Tx7J1VU8srsv-KKPyFeVKfujLWxCwgWQWQPRxNGv1s3RDH/s400/lips.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353864427422351714" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கண்களால்<br />நான் செய்யும் தவறுகளுக்கு<br />இதழ்களால் நீ<br />தண்டனை தருவதால்<br />திருந்துவதாக இல்லை நான்!<br /><br /><strong>நன்றி - கவிஞர் செல்வமுத்துக்குமரன்</strong>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-60868907640000146552009-06-24T16:36:00.008+05:302009-06-24T17:14:49.783+05:30குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/_kUHP0JOcUA&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/_kUHP0JOcUA&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><p><span class="">குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா<br />மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா<br />நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்<br />நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்<br />உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது<br />இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது</span></p><p><span class="">குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா<br />மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா</span></p><p><span class="">நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை<br />அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா<br />மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை<br />கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா<br /><br />வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது<br />எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது<br />துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..</span></p><p><span class="">குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா<br />மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா<br />நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்<br />நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்<br />உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது<br />இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது</span></p><p><span class="">இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே<br />விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..<br />இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே<br />பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..<br /><br />ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே<br />தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே<br />துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..</span></p><p><span class="">குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா<br />மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா<br />நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்<br />நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்<br />உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது<br />இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது</span></p><p><span class="">குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா<br />மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..</span></p>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-77945595246695194382009-06-23T17:23:00.008+05:302009-06-23T18:02:35.269+05:30கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXK-k2AagshG7yZpYwW0BVk1L7bZBnn2dZRUYhIidxFu6YT9ijvqrsA0UnwPhtSQhNEqLQQAKCBGQzSrXEWiod7Ea3RQWg95KYBGZiWlb4tdc48dOSc5XJz82fFHHElWMSCQ1LJzawxVAA/s1600-h/thamarai.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5350494892927868418" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 351px; CURSOR: hand; HEIGHT: 259px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXK-k2AagshG7yZpYwW0BVk1L7bZBnn2dZRUYhIidxFu6YT9ijvqrsA0UnwPhtSQhNEqLQQAKCBGQzSrXEWiod7Ea3RQWg95KYBGZiWlb4tdc48dOSc5XJz82fFHHElWMSCQ1LJzawxVAA/s400/thamarai.jpg" border="0" /></a><br /><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span></div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div>கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!<br />தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள <span class="">வேண்டியிருக்கிறது. </span>குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. </div><br /><div>தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும் ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.</div><br /><div>‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.<br /><strong>தாமரை: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!</strong></div><div><strong></strong><br /></div><div>ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்<br /></div><div>செய்துவிட்டாய்<br /></div><div>எங்கள் தமிழினத்திற்கு...</div><br /><div>எத்தனை<br /></div><div>வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்<br /></div><div>காலில் விழுந்தும் கதறியும்<br /></div><div>கொளுத்திக் கொண்டு செத்தும்<br /></div><div>தீர்ந்தாயிற்று...</div><br /><div>எதுவுமே காதில் விழாத உங்களுக்கு</div><div>இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...</div><br /><div>பட்டினியால் சுருண்டு மடிந்த</div><div>பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து</div><div>அழுது வீங்கிய கண்களோடும்</div><div>அரற்றிய துக்கத்தோடும்<br /></div><div>களைந்த கூந்தலோடும்</div><div>வயிரெரிந்து இதோ விடுகிறேன்..</div><br /><div></div><div>கண்ணகி மண்ணில் இருந்து</div><div>ஒரு கருஞ்சாபம்!</div><br /><div></div><div>குறள் நெறியில் வளர்ந்து</div><div>அறநெறியில் வாழ்ந்தவள்</div><div>அறம் பாடுகிறேன்!</div><br /><div></div><div>தாயே என்றழைத்த வாயால்</div><div>பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்</div><div>இனி நீ வேறு, நான் வேறு!</div><br /><div></div><div>ஏ இந்தியாவே!</div><div>ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி</div><div>குண்டுகளைக் குறிபார்த்துத்</div><div>தலையில் போடவைத்த உன்தலை</div><div>சுக்குநூறாய் சிதறட்டும்!</div><br /><div></div><div>ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த</div><div>எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய</div><div>இனி ஒரு நூற்றாண்டுக்கு<br /></div><div>உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!</div><br /><div>மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு<br /></div><div>மளமளவென்று கலையட்டும்!</div><br /><div>ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்</div><div>இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!</div><div>தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்</div><div>அறுவடையாகட்டும்!</div><br /><div></div><div>மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்</div><div>உங்கள் மலைகள் எல்லாம்</div><div>எரிமலைக் குழம்புகளைக்</div><div>கக்கி சாம்பல் மேடாகட்டும்!</div><br /><div>இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...</div><div>உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!</div><div>உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!</div><div>எதிரிகள் சூழ்ந்து<br /></div><div>உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!</div><br /><div>தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து</div><div>சிதறிய உடல்களோடு</div><div>சுடுகாடு மேடாகட்டும்!</div><br /><div>போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று</div><div>கூசாமல் பொய் சொன்ன வாய்களில்</div><div>புற்றுவைக்கட்டும்!</div><br /><div></div><div>வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!</div><div>எங்கள் எலும்புக் கூடுகள் மீது</div><div>ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...</div><br /><div>உங்கள் சிம்மாசனம் வெடித்துத்</div><div>தூள்தூளாகட்டும்!</div><br /><div></div><div>உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......</div><div>பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!</div><div><br />நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...</div><div>உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து</div><div>ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!</div><br /><div>எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி<br /></div><div>சித்திரவதையில் சாகடித்தீர்களே...</div><div>உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!</div><br /><div>எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த</div><div>சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...</div><div>உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!</div><br /><div>உங்கள் பெண்களெல்லாம்</div><div>படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!</div><br /><div></div><div>நரமாமிசம் புசித்தவர்களே...</div><div>உங்கள் நாடி நரம்பெல்லாம்<br /></div><div>நசுங்கி வெளிவரட்டும்!</div><br /><div></div><div>இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு</div><div>புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...</div><br /><div></div><div>ஆழிப்பேரலை</div><div>பொங்கியெழுந்து<br /></div><div>அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!</div><br /><div></div><div>நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!</div><div>நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!</div><div>நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!..........</div><br /><div></div><div><strong>பின்குறிப்பு:</strong></div><div>உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!</div><div>குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...</div><div>அவர்கள் நீடுழி வாழட்டும்!</div><br /><div></div><div>எம் குழந்தைகள் அழுதாலும்</div><div>உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!</div>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-10224253915103704512009-06-17T11:33:00.003+05:302009-06-17T11:39:35.268+05:30தோல்வி!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6D_nePFMqs92kW-KNgN5XDPFs5remi3Xm3hh50ciWZAwQ-Jtta136sSxPo6ztdcYP8dHCNg8eKQEwv5TK2NvCdrA1l8YqhcesN9qaUceoiV5agZBb2fNHdv_CO4ufQTVG9g_idPTPC3FZ/s1600-h/cool-cartoon-29459.png"><img id="BLOGGER_PHOTO_ID_5348174352312498850" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 162px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6D_nePFMqs92kW-KNgN5XDPFs5remi3Xm3hh50ciWZAwQ-Jtta136sSxPo6ztdcYP8dHCNg8eKQEwv5TK2NvCdrA1l8YqhcesN9qaUceoiV5agZBb2fNHdv_CO4ufQTVG9g_idPTPC3FZ/s400/cool-cartoon-29459.png" border="0" /></a><br /><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div><span class=""></span> </div><div>என் காதல்</div><div>முடியட்டும் தோல்வியில்</div><div><span class="">பிரிவு.........</span></div><div><span class="">என்னை அவள் மிக அருகாமையில்</span></div><div><span class=""><span class=""></span></span><span class="">அழைத்து செல்கிறது.</span></div>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-20652244936837030662009-06-09T10:55:00.007+05:302009-06-09T11:26:10.847+05:30வாசகர்களுக்கு என் வணக்கங்கள்...<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5_2K704qr6CPvs-xY-DDPS1JKtxihbvUHCSvPnVomiPdnL_BwDsY55wf5UGQ7GTLmyaAg9KRPZ_76i0DFZOy_S_LCWsS6M_CRqPoPZnLmx9hA2_FvIauwz1snNRbIWmTyAzKVtVIF24dX/s1600-h/BestWishes.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5345201575779724514" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 281px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5_2K704qr6CPvs-xY-DDPS1JKtxihbvUHCSvPnVomiPdnL_BwDsY55wf5UGQ7GTLmyaAg9KRPZ_76i0DFZOy_S_LCWsS6M_CRqPoPZnLmx9hA2_FvIauwz1snNRbIWmTyAzKVtVIF24dX/s400/BestWishes.jpg" border="0" /></a><br /><div>வணக்கத்திற்குரிய <span class="">வாசகர்களே, </span></div><br /><div><span class="">மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் பதிவு எழுத தோன்றியது. என்னையும் ஒரு பதிவாளனாக கருதி என் பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் என் நன்றி. நான் ஒரு புத்தகம் எழுதும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் என்னால் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பதிவெழுத முடிவதில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனி பதிவு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.</span><br /></div><div><span class="">கடந்த ஏப்ரல் <span class="">மாதம் </span>மூன்றாம் தேதியிட்ட என் பதிவைப் (புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையா?) பார்த்து ஒரு <span class="">வாசகர், </span>அந்த பதிவு தன்னையும் எழுத தூண்டியதாக கூறியதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படி என்னுடைய எழுத்தும் ஒருவருக்கு உபயோகமாக இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.</span></div><br /><div><span class="">பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். கண்டிப்பாக மிக அதிகமான நண்பர்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே போல அவர்களுக்கு கலையார்வமும் கண்டிப்பாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். காரணம், வலையில் பதிவு எழுத நேரம் ஒதுக்கும் உங்களால் கண்டிப்பாக அதன் அனுபவத்திலிருந்து ஒரு புத்தகம் எழுத முடியும் என்று எண்ணுகிறேன். அது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் கருத்து.</span></div><br /><div><span class="">ஆல் தி பெஸ்ட்....</span></div>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-73187958639261948282009-04-28T15:14:00.007+05:302009-04-28T15:33:58.692+05:30கருணாநிதியின் உச்சகட்ட நாடகம் - வைகோ<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifY_IazHMg4_IwaaH_jq8jFfXwAoJ_ZQvlXM8amPwRSw23P28FUwEiqx0w0u4I8hG5oywPdBVWO2lJQr5LLxyS7EN3K9VaHmVc28XOdIYMCIUqu6rB4fr2JsTA0W3IvPZOiz2eqMENEzzo/s1600-h/fast.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5329678675631065858" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 336px; CURSOR: hand; HEIGHT: 231px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifY_IazHMg4_IwaaH_jq8jFfXwAoJ_ZQvlXM8amPwRSw23P28FUwEiqx0w0u4I8hG5oywPdBVWO2lJQr5LLxyS7EN3K9VaHmVc28XOdIYMCIUqu6rB4fr2JsTA0W3IvPZOiz2eqMENEzzo/s400/fast.jpg" border="0" /></a><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><br /><br /><span class=""></span><br /><br /><span class=""></span><br />இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று காலை சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.<br /><strong><span class=""></span></strong><br /><strong>கருணாநிதியின் உச்சகட்ட நாடகம் - வைகோ:</strong><br />முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசுடன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். கடந்த இருண்டு நாட்களாக சிறிலங்கா இராணுவம் ரசாயண குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக சிறிலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ. இதேவேளை, இன்று காலை சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை ஆறு மணி முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.<br />கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் மருத்தவர்கள் வந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து தமது கவலையை வெளியிட்டனர். இந்நிலையில் 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் சிறீலங்கா அரசு போர் நிறுத்தம் எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் தாக்குதலை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-20769100384512820982009-04-14T10:10:00.015+05:302009-04-14T12:47:52.644+05:30இளைஞர்களே இந்தியாவின் வளர்ச்சி உங்கள் கையில்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoMqoL7GTbQMuwF5nHxU_XW9pFLf5nyX4qn6SUTxZ6yWSY5fKBQRFua41bCCnKhd04U0AEDBOlVVhsKtqH47UDaFTLVzoGhNh4OCw8FFHOtoPy39Z6neeIT3mxG3Z344b1INeYR_cLSThyphenhyphen/s1600-h/3.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoMqoL7GTbQMuwF5nHxU_XW9pFLf5nyX4qn6SUTxZ6yWSY5fKBQRFua41bCCnKhd04U0AEDBOlVVhsKtqH47UDaFTLVzoGhNh4OCw8FFHOtoPy39Z6neeIT3mxG3Z344b1INeYR_cLSThyphenhyphen/s400/3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324440742065745122" border="0" /></a>இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு. இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல. அதே மாதிரி அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அந்த பாரம்பரிய தொழிலை சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு <span>பொருளாதாரத்தில் </span>திடமான வளர்ச்சி அடைய முடியும் என்பது என் கருத்து. அதற்காக சாப்ட்வேர் தொழில், அல்லது மற்ற துறைகளை ஒதுக்கி விடுங்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். அது மிகவும் தவறு. ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் <span>இந்தியா </span>ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.<br /><div> </div><br /><div>இன்று ஒரு விவசாயின் நிலைமை எப்படி இருக்கிறது?. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ஒரு விவசாயின் நிலைமைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் இதை சொல்கிறேன். நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் இப்போது பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் கணக்கில் எடுத்தால் ஒரு விவசாயின் நிலைமையை நன்கு உணரலாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு ஏக்கரில் வேர்க்கடலைப் <span>பயிரிட்டோம். </span>அது விளைந்து அந்த ஒரு ஏக்கரில் இருந்து இருபத்தைந்து மூட்டை பயிறு கிடைத்தது. ஒரு மூட்டைப் பயிறு 1500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 25 மூட்டைப் பயிரின் விலை 37500 ரூபாய். ஆனால் இந்த வருடம் நாங்கள் மூன்று ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டு அதனால் கிடைத்த மகசூல் வெறும் 20 மூட்டைதான். ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறதே தவிர கொஞ்சம் கூட மகசூல் அதிகரிக்கவில்லை.</div><br /><div> </div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd8_morX5wiBGjJoGpOlXotu6iAFu1NFbov5dVreqjrnZRkGkTVWsd6yOxLe9kevfyt-sL49Khp_wIjdkesJJrjNrOISW-zKua3YpcNcN_r_fPZYTGQqF3smCbFol9nntt167-gjLPenqi/s1600-h/2.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd8_morX5wiBGjJoGpOlXotu6iAFu1NFbov5dVreqjrnZRkGkTVWsd6yOxLe9kevfyt-sL49Khp_wIjdkesJJrjNrOISW-zKua3YpcNcN_r_fPZYTGQqF3smCbFol9nntt167-gjLPenqi/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324441619192674434" border="0" /></a><div>நிலைமை இப்படி இருக்க என்ன காரணம் என்று பார்த்தோமேயானால், பல காரணங்கள் இருக்கின்றன. <span>அதில் </span>ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் இருக்கிறது. காலங்காலமாக நாம் பயன்படுத்தி வந்த செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை அடியோடு மாற்றி விட்டன. இயற்கை உரங்களைப் போட்டு <span>பயிர்களை வளர்க்கும் முறை </span><span></span> இன்று விவசாயிகளிடம் <span>இல்லை. </span>மற்றொன்று அரசின் அலட்சியம். விவசாய வளர்ச்சிக்கு <span>உண்மையான, </span>தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டுவிட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன. இப்போது 60000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள். <span>நல்ல </span>விஷயம்தான். அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள். ஆனால் கடன் தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் <span></span> இல்லை என்றே பதில் கிடைக்கும்.</div><br /><div> </div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9oihniBpBa9hBU_-A9_pWUVcDKRCPyAmARAvH8ItUzaxk-gK5JNUkHVthlBJ9w87_8N6RBaPayF0SEGXApjEDlfmlz8JrQszFvdZ8zteh8fDzbnc2cMuj2gVyCGzE1O6yi2zXTuTPdIEi/s1600-h/4.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9oihniBpBa9hBU_-A9_pWUVcDKRCPyAmARAvH8ItUzaxk-gK5JNUkHVthlBJ9w87_8N6RBaPayF0SEGXApjEDlfmlz8JrQszFvdZ8zteh8fDzbnc2cMuj2gVyCGzE1O6yi2zXTuTPdIEi/s400/4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324423893891696178" border="0" /></a><div>இதற்கு அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டந்தோறும் வேளாண்மை பல்கலைக் கழகங்களை அமைத்து நல்ல வீரியமுள்ள விதைகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த வகையான பயிர்களை இடலாம் என்று சொல்லி தரலாம். பிறகு முக்கியமாக இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் முறை பற்றியும், விவசாய உரங்களை பயன்படுத்தி பயிர்களை விளைவிப்பதை <span>பற்றியும், </span>அதனால் மண்ணின் தன்மை எப்படி வளமையாகின்றன என்பதைப் பற்றியும் சொல்லி தரலாம். இதெல்லாம் அரசு மேற்கொள்ள வேண்டிய சில சீரியசான நடவடிக்கைகள். அதை விட்டுவிட்டு வெறும் கடனைத் தள்ளுபடி செய்வதால் மட்டுமே விவசாயிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். விவசாய வளர்ச்சிக்கும் அதனால் தொலைநோக்கு <span>பயன் </span>கிடைக்க போவதில்லை.</div><br /><div> </div><br /><div>அடுத்தது விவசாய நிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணய செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும். ஒரு சோப்பு தயாரிக்கும் கம்பெனி எப்படி அந்த சோப்புக்கு அதுவே விலையை நிர்ணயம் செய்யுதோ அதே மாதிரி ஒரு விவசாயியும் அவன் விளைவித்த பயிர்களுக்கு அவனே விலை நிர்ணயம் நிலைமை வர வேண்டும். அரசே விவசாயிகள் விளைவித்த பயிரை நேரடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். இதெல்லாம் அரசு நினைத்தால் முடியாத காரியமல்ல. உடனடியாக அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை மனசாட்சியோடு எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் வளர்ச்சி பெரும்.</div><br /><div> </div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1tTiLLVZSRlBp-xTZaG-uV6-xJTte31S0R51Dt3SO6gU39rQJu00OaM8wRbnZpx75bGIQU8O-yhxMhKZRLAq3o2WsAYYeDSF-FqWjJxglY0WIjYqMhvm-H7AIKUWd9fKyZDN92QUX8HDE/s1600-h/1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1tTiLLVZSRlBp-xTZaG-uV6-xJTte31S0R51Dt3SO6gU39rQJu00OaM8wRbnZpx75bGIQU8O-yhxMhKZRLAq3o2WsAYYeDSF-FqWjJxglY0WIjYqMhvm-H7AIKUWd9fKyZDN92QUX8HDE/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5324423312475208882" border="0" /></a><div>முடிவாக ஒன்று. <span>ஒரு இன்ஜினியர் </span>தந்தை தன் <span>மகன் </span>ஒரு இன்ஜினியர் <span>ஆக </span> வேண்டும் என்று ஆசைப் படுகிறார். ஒரு டாக்டர் தந்தை தன் மகன் ஒரு டாக்டர் <span>ஆக </span>வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஒரு பிசினஸ் மேன் தன் மகன் ஒரு பெரிய பிசினஸ் மேக்னட்டாக வரவேண்டும் என்று ஆசைபடுகிறார். எதுவும் தவறில்லை. ஆனால் ஒரு விவசாயி தந்தை தன் மகன் ஒரு பெரிய விவசாயியாக வரவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. அவனை ஊக்கப்படுத்துவதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு. பிறகு பிற்காலத்தில் யார் விவசாயம் செய்வார்கள். உணவிற்காக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரவேண்டுமா?. என்று ஒரு விவசாயி தன் மகனும் ஒரு விவசாயியாக வரவேண்டும் என்று நினைக்கிறானோ அன்றுதான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கும். இளைஞர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். இப்போது வேறு வேலை பார்த்தாலும் பிற்காலத்தில் உங்களால் முடிந்த அளவு விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருங்கள். வணக்கம்.</div>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-8830601327222993132009-04-12T11:51:00.005+05:302009-04-12T12:47:07.998+05:30இந்த தேர்தலில் விஜயகாந்தின் பலம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBoCEs32JuNpW5Zdla1geK2NPwVWnbl9P_MQ_tDVrX5YX1JsG9AjIU1zWPUQpaqelkxAteV9l579Ewurl89MYXtSM9QVo8usmOpM-arxDLq_yt23NxcjXlnDkj3lk59Tbz2E-lTiRNrKXc/s1600-h/manmohan.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 350px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBoCEs32JuNpW5Zdla1geK2NPwVWnbl9P_MQ_tDVrX5YX1JsG9AjIU1zWPUQpaqelkxAteV9l579Ewurl89MYXtSM9QVo8usmOpM-arxDLq_yt23NxcjXlnDkj3lk59Tbz2E-lTiRNrKXc/s400/manmohan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323698989114503890" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />இந்த லோக்சபா தேர்தலில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசல் இது. கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதில் யார் நிறைய தொகுதிகளை வென்று முதலிடம் பிடிக்க போகிறார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதில் இலங்கை பிரச்சினை யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருக்குமா?. திமுகவின் சாதனைகள் இந்த தேர்தலில் அதற்கு முதன்மை பெற்று தருமா?. இப்படி பல கேள்விகள் நமக்குள் இருக்கின்றன.<br /><br />இருந்தாலும் இந்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பது என் பலமான கருத்தாக உள்ளது. காரணம் அந்த அரசின் சாதனைகள். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பலமான வரவேற்பை பெற்றுள்ளன. ஏழை விவசாயிகளின் ஏழாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி ஒரு நல்ல விஷயம். அதே மாதிரி மத்திய அரசு அறிவித்த 60000 கோடி ரூபாய் <span>தள்ளுபடி </span>இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதும் எனது கருத்தாக உள்ளது. இலவச கலர் டிவி திட்டம், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் திட்டம், ஒரு லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் என்று பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. இவையெல்லாம் இந்த திமுக அரசுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பது என் யூகம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM96onC58PXY0urmKB7OSIY4o-FZzJzBvvDvKhd310-8LSTAvhBNZTYTA4nepeiVxun4cKk6ze7BiM9lkUWKRjcKdQJkI51QSUwpqjnY3WYz-LYxqpMSj6EbCTSrDSSvy1Y3lUVpXqPsHq/s1600-h/jaya.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 397px; height: 297px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjM96onC58PXY0urmKB7OSIY4o-FZzJzBvvDvKhd310-8LSTAvhBNZTYTA4nepeiVxun4cKk6ze7BiM9lkUWKRjcKdQJkI51QSUwpqjnY3WYz-LYxqpMSj6EbCTSrDSSvy1Y3lUVpXqPsHq/s400/jaya.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323698988023944994" border="0" /></a><span><span><span><span>ஆனால்</span></span></span></span> இந்த தேர்தலில் திமுக அரசின் கூட்டணி கொஞ்சல் பலவீனமாகவே உள்ளது. போன தேர்தலில் 40/40 என்று ஜெயித்தவர்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக அந்த விகிதத்தில் ஜெயிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி அதிமுக இந்த தேர்தலில் பலமான கூட்டணியுடன் களமிறங்குகிறது. அது அதிமுக கட்சிக்கு ஒரு பழம். ஆனால் அதிமுக ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டுள்ளதா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல தோன்றும். ஆ ஊ என்றால் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவுக்குள் ஓடி மறைந்து கொள்கிறார். பாமகவுக்கு உள்ள மரியாதையை ராமதாசே கெடுத்துக் கொண்டார். வைகோவை பற்றி சொல்ல தேவையில்லை. ஒன்றுக்கும் ரெண்டுக்கும் ஜெயலலிதாவிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார். அவர் காட்சியில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நாஞ்சில் சம்பத்தும் சிறையில் இருக்கிறார்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8PYSUnvU70CMjBsEvaSQiaXBfUCR_4x2qAgJe4T7ev1-BXb2PCL24jADJ_fVNpBLpRvJvhrP84cU2EZazbTEU4nmtoDM2WxCyJ1ncSL0M7Upc8ZYSVgh1aWkdh03yA3jAovqSqegSmFZv/s1600-h/vijaykanth.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8PYSUnvU70CMjBsEvaSQiaXBfUCR_4x2qAgJe4T7ev1-BXb2PCL24jADJ_fVNpBLpRvJvhrP84cU2EZazbTEU4nmtoDM2WxCyJ1ncSL0M7Upc8ZYSVgh1aWkdh03yA3jAovqSqegSmFZv/s400/vijaykanth.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5323698993529281010" border="0" /></a><br />இதில் கேப்டன் விஜயகாந்த் என்ற ஒருவர் தான் தேறுகிறார். இந்த தேர்தலில் தனியாக களம் காண்பது அவருக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்துள்ளது. மற்ற கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இளைஞர்களின் ஒட்டு அந்த கட்சிக்கு நிறையவே உள்ளது. நான் கேட்ட நிறைய பேர் விஜயகாந்துக்கு ஒட்டு போடுவார்கள் என்றே சொன்னார்கள். அதை வைத்து பார்க்கும் போது இந்த தேர்தலில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த தேர்தலில் கண்டிப்பாக 15 சதவீத ஓட்டுக்களை பெறுவார் என்று நம்புகிறேன். சரி இந்த தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என்று இங்கே கொடுத்துள்ளேன்.<br /><br />திமுக - <span>23<br /><br /></span>அதிமுக - 13<br /><br />தேமுதிக - 4<br /><br />தேமுதிக இந்த தேர்தலில் நான் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு தொகுதிகளில் ஜெயித்தால் அவருக்கு அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இது லோக்சபா தேர்தல் என்றாலும் மாநில அரசின் சாதனைகள் திடமாக பிரதிபலிக்கும்.<br />சரி இலங்கைப் பிரச்சினைப் பற்றி பேசவே இல்லையே என்று கேட்கிறீர்களா?. ஆனால் அந்த பிரச்சினை இந்த <span>தேர்தலில் </span>ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது. பெரும்பாலான மக்கள் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக நினைக்கவில்லை.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com83tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-31276119005927603442009-04-08T16:23:00.004+05:302009-04-08T16:40:10.884+05:30இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-bzlwjVHv5Z95PJ83jtbT-ozeILoW6Z99AEAflV4nfh9KDqEARKAW8D4ZtxPUm81ioImIfSU1Cl-ukWr4mTueEWcEqU1qtU6ql6VItgGHM-uwow6FuycVuamAqLZGTKieSe74QGlxAO65/s1600-h/oldindia.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 328px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-bzlwjVHv5Z95PJ83jtbT-ozeILoW6Z99AEAflV4nfh9KDqEARKAW8D4ZtxPUm81ioImIfSU1Cl-ukWr4mTueEWcEqU1qtU6ql6VItgGHM-uwow6FuycVuamAqLZGTKieSe74QGlxAO65/s400/oldindia.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5322275848878019186" border="0" /></a>எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. ஒரு விஷயத்தைப் பற்றி அலசாமலேயே வெறும் தலைப்பைக் கொடுத்துவிட்டு நம்முடைய பிளாக் நண்பர்களின் கருத்தை அறிய வேண்டும் என்று. என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்ததுதான் மேலே சொன்ன தலைப்பு.<br /><br />சரி விஷயத்திற்கு வருவோம். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது இரண்டும் எதிரி நாடாக இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இரண்டு நாடுகளும் மறுபடியும் சேருவது என்பது நடக்கக் கூடிய காரியமா?. <span> ஒருவேளை</span> அப்படி இரு நாடுகளும் சேர்ந்தால் அது இந்தியாவுக்கு லாபமா அல்லது நஷ்டமா?. அல்லது பாகிஸ்தானுக்கு அது லாபமா இல்லை நஷ்டமா?. இதனால் இரு நாடுகளும் பயனடையுமா?. இதற்கெல்லாம் என்னிடம் தெளிவான பதில் இல்லை. அதனால் வாசகர்களாகிய நீங்கள் தான் என்னுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1007885093688814531.post-52254430481582179212009-04-07T18:32:00.006+05:302009-04-07T19:56:27.301+05:30வடகொரியா ஏவுகணை சோதனையும், இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgXVjoOeZH7ZVdkz1ujKB3gxotTDqrouKC_s1Fm39-5CtOrvJPS4HRCfP2DGniEyTPhroHUcNkpt0u79OXKF9CBJKEQfQMU-nTO6jyrD_SaoVQP-FZdYzozy9gd_MK_ZyK7Z2ZdN8VJ5b0/s1600-h/north_korea.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 314px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgXVjoOeZH7ZVdkz1ujKB3gxotTDqrouKC_s1Fm39-5CtOrvJPS4HRCfP2DGniEyTPhroHUcNkpt0u79OXKF9CBJKEQfQMU-nTO6jyrD_SaoVQP-FZdYzozy9gd_MK_ZyK7Z2ZdN8VJ5b0/s400/north_korea.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321953281379019970" border="0" /></a><span>சில</span> <span>நாட்களுக்கு</span> <span>முன்பு</span> <span>வடகொரியா</span> <span>நீண்ட</span> <span>தூரம்</span> <span>சென்று</span> <span>தாக்கக்கூடிய</span> <span>ஏவுகணையை</span> <span>சோதனை</span> <span>செய்தது</span>. <span>இதற்கு</span> <span>உலகின்</span> <span>பல</span> <span>பகுதிகளில்</span> <span>இருந்தும்</span> <span>எதிர்ப்பு</span> <span>கிளம்பின</span>. <span>முக்கியமாக</span> <span>அமெரிக்காவிடம்</span> <span>இருந்து</span>. <span>வடகொரியா</span> <span>ஏவுகணை</span> <span>சோதனை</span> <span>செய்தது</span> <span>சரியா? </span><span>அல்லது</span> <span>தவறா? </span><span>என்று</span> <span>பல</span> <span>பகுதிகளில்</span> <span>இருந்தும்</span> <span>சந்தேகங்கள்</span> <span>கிளம்பியுள்ளன</span>. <span>அதைப்</span> <span>பற்றி</span> <span>கீழே</span> <span>சற்று</span> <span>அலசுவோம்</span>.<br /><div> </div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfl6hrj-QKCywp5m4Oo8JS7a0Uacag_O4xSpKysKal8mLN3coRKPqsZIU8ww-kdps3M-_CIdupjaoydagrRZi8ga_5t8JxnRdss0PbFcIkYp9W-6_TDz4qmbT4n3fMGgEjQrN9OxzxXVJ-/s1600-h/missile.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 385px; height: 185px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfl6hrj-QKCywp5m4Oo8JS7a0Uacag_O4xSpKysKal8mLN3coRKPqsZIU8ww-kdps3M-_CIdupjaoydagrRZi8ga_5t8JxnRdss0PbFcIkYp9W-6_TDz4qmbT4n3fMGgEjQrN9OxzxXVJ-/s400/missile.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321953280412397522" border="0" /></a><div>எந்த ஒரு நாடும் <span>அதிநவீன </span>போர் உபாயங்களை சோதனை செய்தால் அதற்கு முதலில் எங்கிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது என்று பார்த்தால் அது அமெரிக்காவில் இருந்துதான். காரணம் ராணுவத்தில் தான்தான் பெரிய ஆளாக (தாதா) இருக்க வேண்டும் என்ற மனோபாவம். வடகொரியா தற்போது <span>சோதித்துள்ள </span>ஏவுகணை 7600 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையாம். அதாவது அமெரிக்காவின் அலாஸ்கா நகரத்தைக் கூட இந்த ஏவுகணையால் தாக்க முடியுமாம். ஆனால் இந்த சோதனை சில வினாடிகளிலேயே தோல்வி அடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. வடகொரியாவிற்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தக்கூடிய திறன் இல்லை என்றும் அமெரிக்க கூறுகிறது. அவ்வாறு செலுத்துவது மிகவும் கடினமான காரியம் என்றும் இன்னும் பத்து வருடத்திற்கு வடகொரியாவால் அத்தகைய ஏவுகணையை வெற்றிகரமாக சோதிக்க முடியாது என்றும் அமெரிக்க கூறியுள்ளது. வடகொரியா ஏற்கனவே நிறைய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால் நிறைய சோதனை தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருந்தாலும் அவற்றை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போர் சமயத்தில் அத்தகைய ஏவுகணையை செலுத்தினால் அது தவறாக வேறு பகுதியில் விழுந்து அது நிறைய மக்கள் மடிவதற்கு காரணமாக இருக்கும்.</div><br /><div> </div><span>சரி</span> <span>முக்கியமான</span> <span>விஷயத்திற்கு</span> <span>வருவோம்</span>. <span>ஏன்</span> <span>வடகொரியா</span> <span>ஏவுகணை</span> <span>சோதனை</span> <span>நடத்தினால்</span> <span>அமெரிக்காவிற்கு</span> <span>கோபம்</span> <span>வருகிறது</span>. <span>அமெரிக்கா</span> <span>மட்டும்</span> <span>மற்ற</span> <span>நாடுகளைத்</span> <span>தாக்கக்கூடிய</span> <span>நீண்ட</span> <span>தூர</span> <span>ஏவுகணை</span> <span>சோதனை</span> <span>செய்யலாம்</span>. <span>அமெரிக்காவிடம்</span> 10000 <span>கிலோமீட்டர்</span> <span>தூரம்</span> <span>வரை</span> <span>சென்று</span> <span>துல்லியமாக</span> <span>தாக்கக்கூடிய</span> <span>ஏவுகணைகள்</span> <span>பல</span> <span>உள்ளன</span>. <span>மற்ற</span> <span>நாடுகள்</span> <span>அணுகுண்டு</span> <span>சோதனை</span> <span>செய்தால்</span> <span>அதன்</span> <span>மீது</span> <span>பொருளாதாரத்</span> <span>தடை</span> <span>விதிக்கும்</span> <span>அமெரிக்கா</span> <span>தன்னிடம்</span> <span>மட்டும்</span> 10000 - <span>க்கும்</span> <span>அதிகமான</span> <span>அணுகுண்டுகளை</span> <span>வைத்துள்ளன</span>. <span>இதை</span> <span>அனைத்து</span> <span>நாடுகளும்</span> <span>சிந்தித்துப்</span> <span>பார்க்க</span> <span>வேண்டும்</span>. <span>முக்கியமாக</span> <span>இந்தியா</span> <span>அதனை</span> <span>கருத்தில்</span> <span>கொள்ள</span> <span>வேண்டும்</span>.<br /><div> </div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBVoI1awhThNXK8g8bcUL0hPtzqckzgvb3Le0FkROG7aubGkEJ0IGzkpYm6b6leMwHG8DxQaetmLc9zRQ8qaXYYT-C_dj3HhauE46YY1W5GCby0SRMbaBcwj2vsWHMNcFoqdaH5yEsUifx/s1600-h/falcon1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 215px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBVoI1awhThNXK8g8bcUL0hPtzqckzgvb3Le0FkROG7aubGkEJ0IGzkpYm6b6leMwHG8DxQaetmLc9zRQ8qaXYYT-C_dj3HhauE46YY1W5GCby0SRMbaBcwj2vsWHMNcFoqdaH5yEsUifx/s400/falcon1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321953273917432802" border="0" /></a><div>அமெரிக்காவின் இந்த பெரிய அண்ணன் கொள்கையை மற்ற மற்ற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதில் சீனாவின் கொள்கையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். எனக்குத் தெரிந்து அமெரிக்காவை தைரியமாக எதிர்க்கக் கூடிய நாடு எது என்றால் அது சீனாவாகத்தான் இருக்க முடியும். அந்த தைரியம் மற்ற நாடுகளுக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் சீனாவை முழுமையாக பின்பற்ற வேண்டும். அமெரிக்கா எது சொன்னாலும் தலையாட்டும் மனோபாவத்தை இந்தியா விடவேண்டும். இந்தியாவால் எந்த ஒரு விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக் கூடிய தைரியம் வரவேண்டும்.</div><br /><div> </div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmqrttv_i9goFbc_hzYNXG9ZRjQbmQZH3n5rEpRgQ4NsXxKedgX624r7EYT4KmCtoztf5J3km-H1aR7_TI7Ied7O3vE1crnXGi8ANsvEuvLYk5kmO8mNV7FFNlZv17D5Tx5xk2hyW6H1kR/s1600-h/indira_pokhran.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmqrttv_i9goFbc_hzYNXG9ZRjQbmQZH3n5rEpRgQ4NsXxKedgX624r7EYT4KmCtoztf5J3km-H1aR7_TI7Ied7O3vE1crnXGi8ANsvEuvLYk5kmO8mNV7FFNlZv17D5Tx5xk2hyW6H1kR/s400/indira_pokhran.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5321953276480459794" border="0" /></a><div>வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது மிகச்சரியே. எந்த ஒரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக் கொள்ள கூடிய சக்தி இருக்க வேண்டும். அது அமெரிக்காவிடம் மட்டும் இருக்க வேண்டிய விஷயமல்ல. இதற்காக அமெரிக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டா செய்ய முடியும். வடிவேலு பாஷையில் சொன்னால் இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. இறையாண்மையை எந்த ஒரு நாடும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அந்த நாடு அழிவின் பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். இந்தியா இந்த விஷயத்தில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.</div>Venkatesan Phttp://www.blogger.com/profile/04228607361855405076noreply@blogger.com6