கடலே
உன் உப்பு
இனி எனக்கு ஆகாது
என் மக்களின் உணவை
எனது உணவில்
சேர்க்க முடியாது
நீலம் நிறம் என்றிருந்தோம்
விஷமென்று
விளங்கிவிட்டது
ஆண்கள்
பெண்கள்
குழந்தைகளைத் தின்று
வாயில் நுரைதள்ள
இன்னும்
வேட்டையாடக் காத்திருக்கும்
தண்ணீர் மிருகமாய்
படுத்துக்கிடக்கிறாய்
உலகெங்கும்
உன் கரையில்
குழந்தைகள் கட்டும்
மணல் வீடுகளில்
இனி ஆவிகள் வசிக்கக்கூடும்
இனி எப்போதும்
உன்னிடம் நான் வரமாட்டேன்
என் மக்களின் கண்ணீரில்
என்னால்
கால் நனைக்க முடியாது
- கவிஞர் பழநிபாரதி
No comments:
Post a Comment