Tuesday, March 3, 2009

பாசமலர் பாடல்கள்


மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே (மலர்ந்தும்)

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் (மலர்ந்தும்)

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா

ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
--------------------------------------*--------------------------------------

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே - (எங்களுக்கும்)

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும்
வளர்ந்தவுடன் காய்கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன்
பழம் பறிப்போமே - (எங்களுக்கும்)

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுகமும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல்
பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடிமனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே - (எங்களுக்கும்)

நெஞ்சில் ஒரு களங்கமில்லை
சொல்லில் ஒரு பொய்யுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை
தோல்வியும் இல்லை ..... ஆஆஆஆஆஆஆ - (எங்களுக்கும்)

No comments: