Saturday, March 7, 2009

புதுப்புது அர்த்தங்கள் பாடல்கள்



கல்யாண
மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன் (கல்யாண)
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே (கல்யாண)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசமொரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜியமே - (கல்யாண)

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்து பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கிவரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என்சோகம் என்னோடுதான் - (கல்யாண)
--------------------------------------------*---------------------------------------------


கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஆஆஆ ....................
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற - (கேளடி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை - (கேளடி)

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது - (கேளடி)
----------------------------------------*---------------------------------------


ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீகக் குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெண் : தினம்தோறும் இரவில் நடுஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண் : அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன்தான்

பெண் : வா வா என் தேவா செம்பூவாய் என்தேகம்
சேராதோ உன் கைகளிலே

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என்மேல் ஒரு போர் தொடுக்க

ஆண் : எனை வந்துத் தழுவு ஏனிந்த பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெண் : பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

ஆண் : மாது உன்மீது இப்போது என்மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

No comments: