Sunday, March 1, 2009

எம் ஜி ஆர் பாடல்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான் - (கொடுத்ததெல்லாம்)

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும்
தெய்வம் கொடுத்தில்லை- (கொடுத்ததெல்லாம்)

படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை - (கொடுத்ததெல்லாம்)

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடிநிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் -(கொடுத்ததெல்லாம்)

No comments: