அன்புக்குரியவனே!
சிறிது நேரமாவது சிந்தித்திருக்கிறாயா?
உடம்பை உயிர் இயக்குவது மாதிரி, நம் நடைமுறை
வாழ்க்கையை மொழிதான் இயக்குகிறது என்ற உண்மையை
ஒரு போதேனும் நீ உணர்ந்திருக்கிறாயா?
உடம்பை உயிர் இயக்குவது மாதிரி, நம் நடைமுறை
வாழ்க்கையை மொழிதான் இயக்குகிறது என்ற உண்மையை
ஒரு போதேனும் நீ உணர்ந்திருக்கிறாயா?
வைத்துவிட முடியாது
ஒரு மனிதனின் பிறப்பைப் போலவே அவனது தாய்
மொழியும் தற்செயலானது என்பது ஒப்புக்கொள்ளப்படவேண்டிய உண்மையே.
வாழ்நாள் முழுவதும் நான் வலியுறுத்திக் கொண்டிருப்பேன்.
மொழி ஒரு மனிதனின் அறிவை வளர்க்கிறது.
அந்த அறிவுதான் ஒருவனுக்கு மனிதன் என்ற மரியாதையைப்
பெற்றுத் தருகிறது.எனவே மொழிக்கு நீ காட்டும் நன்றிதான் - மொழிப்பற்று.
நாம் மொழிப்பற்றோடு இருக்க வேண்டும் என்று முழங்கிக்
கொண்டிருப்பதே நாம் நன்றியற்றவர்களாக இருக்கிறோம்என்பதை நாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நான் தமிழ்தான் மொழிப்பற்று என்று சொல்லவில்லை.
தாய்மொழியாக எந்த மொழியைக் கொண்டவரும் அந்தமொழியை நேசிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
மொழிதான் ஞானம்; மொழிப்பற்று என்பது மானம்.
1 comment:
U r absolutely correct. We should love our mother language. But its shame that most of the educated guys feel shame to speak tamil even to their friends.
Post a Comment