Tuesday, February 24, 2009

என்ன நடக்கிறது?!













சுடுகாடு பக்கம் வீடு
கட்ட மறுப்போம் இங்கே
வீட்டுக்குள்ளே சுடுகாடு அங்கே!
பூச்சாண்டி கதை கேட்டு பயந்து
உணவு உண்ணும் குழந்தைகள் இங்கே
பிணங்களின் ஊடே உணவின்றி அழும் குழந்தைகள் அங்கே!
இறந்த பின்னே கோடி போடும் பழக்கம் இங்கே
கோடி போடும் மாமனும் மச்சானும்
கூடவே பிணமாய் கிடக்கிறான் அங்கே!
மரங்கள் வெட்டுண்டாலே மாநாடு போடும் உலகமே
மக்கள் அங்கே மாய்கிறார்கள்
மரமாய் நிற்கிறாயே!

No comments: