தெருவோரம்
நடந்து செல்கையில்
தெய்வத்தினும் அழகிய
திருமுகத்தைப் பார்த்தேன்
சிரித்த தெனைப்பார்த்து
சிரித்தேன் அதைப்பார்த்து
கண்ணடித்த தெனைப்பார்த்து
கண்ணடித்தேன் அதைப்பார்த்து
கைநீட்டி அழைத்தது
கையருகில் சென்றேன்
இருகைகளையும் உயர்த்தியது-தூக்கி
மார்போடு இருத்திக் கொண்டேன்
முத்தமிட்டது கன்னத்தில்
முத்தமிட்டேன் அதன் கன்னத்தில்
நேரமாகிவிட்டது எனக்கு
செல்லவேண்டும் ஓரிடம்
இறக்கி விடைகொடுத்தேன்
பிரிய மனமில்லாமல்
தெருகடந்து செல்லும்வரை
திரும்பி நடந்தேன்
தெய்வத்தினும் அழகிய-அந்த
திருமுகத்தைப் பார்த்தபடி....
3 comments:
//இருகைகளையும் உயர்த்தியது-தூக்கி
மார்போடு இருத்திக் கொண்டேன்
முத்தமிட்டது கன்னத்தில்
முத்தமிட்டேன் அதன் கன்னத்தில்//
புரியும்படியான வார்தைகளில் கவிதை.. அழகு!!
தொடர்ந்து எழுதுங்கள் வெங்கடேஷ்!!
நன்றி கலையரசன்..
உங்கள் பாராட்டுக்கு..
பாராட்டுக்கள் நம்மை உற்சாகபடுத்துகின்றன....
Cute Kavithai வெங்கி :)
Post a Comment