Wednesday, June 24, 2009

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்


குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா

வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..

ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..

No comments: