Tuesday, February 12, 2013

சென்ற வாரம் நீயா நானா பார்த்தேன். அருமையாக இருந்தது. ஒரு பக்கம் நன்கு படிக்கும் மாணவர்களும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இருந்தனர். நடுவர் கோபிநாத் மாணவர்கள் பக்கம் பார்த்து இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனை என்னவென்று கேட்டார். அதற்கு மாணவர்கள் ஊழல், அரசியல்வாதிகளின் செயல்பாடு, இட ஒதிக்கீடு என்று சொல்லிக்கொண்டே போனார்கள். கூடன்கூளத்தில் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு மாணவர்கள், அணு உலை வேண்டும் என்றார்கள். ஆனால் ஒருவரிடமும் அங்கே உண்மையாக என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவரின் (உதயகுமார்) பின்னால் பல ஊர்கள் திரண்டு வருகிறதென்றால் அந்த ஊரில் உள்ளவர்களெல்லாம் முட்டாள்களா? இன்னொன்று இட ஓதிக்கீட்டு பிரச்சனை. இட ஒதிகீட்டை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு சிலரைத் தவிர எல்லோருமே கையை தூக்கினார்கள். காரணம் கேட்டால் அது எங்களையெல்லாம் பாதிக்கிறது என்றார்கள். குறைந்த மதிப்பெண் பெற்ற தாழ்ந்த சாதி மாணவர்களெல்லாம் இதனால் பயன்பெறுகிறார்கள் என்றார்கள்.இந்த தாழ்ந்த ஜாதி மக்களால் இவர்களும் இவர்களுடைய முன்னோர்களும் எவ்வளவு பயனடைந்தனர் என்று இவர்களுக்கு தெரியவில்லை. இன்றும் கூலிகளாக இருக்கும் நிறைய பேர் இந்த தாழ்ந்த ஜாதி மக்கள்தான். இவர்களால்தான் இன்று நாம் சாப்பிடுகிறோம். இப்படி பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இனம் மற்ற உயர் ஜாதி (?) வகுப்பினருக்கு சமமாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த இட ஒதிக்கீடு தொடங்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு மாணவருக்கும் தெரியவில்லை. எல்லா விசயங்களையும் மேலோட்டமாகவே பார்கிறார்கள். நான் நல்லாயிருந்தால் சரி என்று சுயநலமாகவே சிந்திக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் அப்படி இருந்தால் போகட்டும். ஆனால் நாளைய எதிர்காலமான மாணவர்கள் ஒரு விசயத்தை மேலோட்டமாக பார்ப்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் எத்தனை கிராமங்களில் இரண்டு டம்ளர் முறை இருக்கிறது? ஊரையும் சேரியையும் பிரிக்கும் சுவர் இருக்கிறது? இதெல்லாம் இன்றைய அறிவில் சிறந்த சமூகத்திற்கு தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சமூகத்தை ஏற்ற தாழ்வுகள் இல்லாத சமூகமாக மாற்றுவது படித்த நம் போன்ற இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அதானால் தான் மற்றும் தன் குடும்பம் மட்டும் நல்ல இருந்தால் போதும் என்று சுயநலமாக இருப்பதை விட்டுவிட்டு எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுநலமாக சிந்தித்தால் அது நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்கும் உபயோகமாக இருக்கும். வீடு நலம்பெறும் நம் நாடும் நலம்பெறும். http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc

No comments: