Wednesday, August 5, 2009

களவாடிய பொழுதுகள்














கடற்கரை மணல்திட்டுகளில்
காலில் மணலூற-நாம்
களவாடிய பொழுதுகள்
கருகிப் போனதடி
என் கண்ணே!

மடிமீது தலைவைத்து
மனதை வான்வைத்து-அழகு
மயில்போல மறைந்த
மாலை பொழுதுகள்
மீண்டும் திரும்புமோ
என் கண்ணே!

கன்னம் திருப்பினாய்
செவ்விதழில் முத்தமிட்டேன்
பொய்யாய் அடித்தாய்-சிறு
பொய்யாகவேனும் புலருமோ
அந்த பொழுதுகள்
என் கண்ணே!

இரவைச் சுட்டெரித்த
சூரியன் போல- நம்
பிரிவை சுட்டெரிக்க
நினைவுகள் ஒன்றே போதும்
என் கண்ணே!

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்

www.ulavu.com

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....