Showing posts with label கருணாநிதியின் வேஷம். Show all posts
Showing posts with label கருணாநிதியின் வேஷம். Show all posts

Friday, February 20, 2009

கருணாநிதியின் வேஷம்


இலங்கை பிரச்சனை எப்போது தீவிரமாக தலையெடுக்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே முதல்வர் கருணாநிதிக்கு உதறல் ஆரம்பித்து விட்டது. இலங்கை பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து, அதனை சமாளிக்க வழி தெரியாமல் பயந்து கொண்டு மருத்துவமனையில் ஒளிந்து கொண்டுள்ளார். முதலில் இரண்டு வாரம் ஒய்வு என்று சொன்னார்கள். இப்போது அதை இன்னும் நான்கு வாரம் ஆக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று தெரியவில்லை. சட்டம் படிக்கும் சட்ட கல்லூரி மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுகிறார்கள். சட்டத்தை காக்க வேண்டிய வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னாடியே பெரும் கலவரத்தில் இறங்குகிறார்கள். இதையெல்லாம் தைரியமாக சமாளிக்க தெரியாத முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லை என்ற பொய்யான காரணத்தை சொல்லிக்கொண்டு மருத்துவமனையில் உறங்கிகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் இதனை தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். வரும் தேர்தலில் இதன் விளைவு கண்டிப்பாக தெரியவரும்.